பதிவு செய்த நாள்
19 ஜூலை2012
17:10
மும்பை : வாரத்தின் 4வது நாளில் ஏற்றத்துடன் ஆரம்பித்த பங்குவர்த்தகம் மாலையிலும் ஏற்றத்துடனேயே முடிந்தது. வர்த்தக நேர முடிவின்போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 93.84 புள்ளிகள் உயர்ந்து 17,278.85 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 26.40 புள்ளிகள் உயர்ந்து 5,242.70-ஆகவும் இருந்தது.
இன்போசிஸ், ரிலையன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்ளிட்ட நிறுவனத்தின் முதல்காலாண்டு அறிக்கை லாபகரமாக இருப்பது மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு பொருளாதார ரீதியாக மத்திய அரசு எடுக்கவுள்ள சில முக்கிய முடிவுகள் போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தது.
இந்திய பங்குசந்தையை அளவிட உதவும் 30 பங்குகளில் 22 பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன. இன்றைய வர்த்தக்கத்தில் இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஸ்டர்லைட், டாடா பவர், பெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் நல்ல லாபம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|