பதிவு செய்த நாள்
20 ஜூலை2012
00:24
கீழக்கரை:உப்பு விலை சரிவால், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் ஆயிரக்கணக்கான டன் உப்பு தேங்கி உள்ளது.திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. நடப்பாண்டில் கடும் வெயில் மற்றும் பலத்த காற்று காரணமாக உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால் அதன் விலை குறைந்து, டன் கணக்கில் உப்பு தேக்கமடைந்துள்ளது.
இது குறித்து, உப்பள மேற்பார்வையாளர் வேலுசாமி கூறியதாவது:கடந்தாண்டு, ஒரு டன் உப்பு, 900 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது 700 ரூபாயாக குறைந்துள்ளது. மின் கட்டணம் உயர்வு, தொழிலாளர் சம்பளம் அதிகரிப்பு போன்ற கூடுதல் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ளோம். மழை காலத்தில், இதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உப்பளத்திற்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்கி, "கரைந்து' வரும் உப்பளத் தொழிலையும், அதை நம்பியுள்ள தொழிலாளர்களையும் மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு வேலுசாமி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|