பதிவு செய்த நாள்
20 ஜூலை2012
00:53
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று நன்கு இருந்தது. பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, பல முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியதையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது.இது தவிர, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்றைய அன்னிய செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 0.36 காசுகள் அதிகரித்து, 55.48 லிருந்து, 55.12 ரூபாயாக வலுப்பெற்றது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய், எரிவாயு, மின்சாரம், மருந்து உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, அதிகரித்து காணப் பட்டது. இருப்பினும், மோட்டார் வாகனம், நுகர்பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, குறைந்து போனது.குறிப்பாக, மாருதி நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால், இந்நிறுவனப் பங்கின் விலை 8.74 சதவீதம் சரிவடைந்து, 1,224.30 ரூபாயிலிருந்து, 1,117.35 ரூபாயாக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 93.84 புள்ளிகள் அதிகரித்து, 17,278.85 புள்ளிகளில் நிலைகொண்டன. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17, 318.93 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,244.76 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், எட்டு நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 26.40 புள்ளிகள் உயர்ந்து, 5,242.70 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிக பட்சமாக 5,257.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,233.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|