பதிவு செய்த நாள்
20 ஜூலை2012
10:19
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27.52 புள்ளிகள் குறைந்து 17251.33 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11.65 புள்ளிகள் குறைந்து 5231.05 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று நன்கு இருந்தது. பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, பல முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியதையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது.இது தவிர, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.15 ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|