பதிவு செய்த நாள்
21 ஜூலை2012
00:02
கோல்கட்டா:நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டின், முதல் ஐந்து மாத காலத்தில், சர்வதேச கருப்பு தேயிலை உற் பத்தி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 9 சதவீதம் குறைந்து, 57.55 கோடி கிலோவாக சரிவடைந் துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 64.74 கோடி கிலோவாக இருந்தது என, இந்திய தேயிலை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான, ஐந்து மாத காலத்தில்,சர்வதேச அளவில் ஏற்பட்ட, பருவ நிலை மாற்றத்தால், கருப்பு தேயிலை விளையும் முக்கிய நாடுகளில், அதன் விளைச்சல் குறைந்துள்ளது.இதனால், ஒட்டு மொத்த உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், இந்தியாவின், கருப்பு தேயிலை உற்பத்தி, 2.77 கோடி கிலோ குறைந்து, 21.58 கோடி கிலோவாக குறைந்துள்ளது. வட மாநிலங்களில், இதன் உற்பத்தி, 1.79 கோடி கிலோ குறைந்து, 12.88 கோடி கிலோவாகவும், தென் மாநிலங்களில், இதன் உற்பத்தி, 98.60 லட்சம் கிலோ குறைந்து, 8.70 கோடி கிலோவாகவும் சரிவடைந்துள்ளது.
கென்யாவின் தேயிலை உற்பத்தி, 2.15 கிலோ குறைந்து, 12.79 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது. உகண்டா வின் உற்பத்தி, 88.60 லட்சம் குறைந்து, 1.26 கோடி கிலோவாகவும், இலங்கையின் தேயிலை உற்பத்தி, 52.90 லட்சம் கிலோ சரிவடைந்து, 13.56 கோடி கிலோவாகவும் குறைந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|