பதிவு செய்த நாள்
21 ஜூலை2012
00:07
புதுடில்லி:சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவிலிருந்து, புதிய சந்தைகளுக்கான ஜவுளி ஏற்றுமதி, 16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், மேற்கண்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்திய ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா, உருகுவே, பிரேசில், மெக்சிகோ, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, இஸ்ரேல் ஆகிய புதிய சந்தைகளுக்கான, ஜவுளி ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.சென்ற நிதியாண்டில், புதிய சந்தைகளுக்கான ஜவுளி ஏற்றுமதி, 315 கோடி டாலராக (17,325 கோடி ரூபாய்) அதிகரித்துள் ளது. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, (270 கோடி டாலர்/14,850 கோடி ரூபாய்) 16 சதவீதம் அதிகமாகும்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|