பதிவு செய்த நாள்
21 ஜூலை2012
00:30
சேலம்:வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு வந்து கொண்டு இருந்த, கொண்டைக் கடலையின் வரத்து சரிந்ததால், அதன் விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக பொட்டுக் கடலை (வறுகடலை) விலையும் அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி:தமிழகத்தில் நடப்பாண்டில் கொண்டைக் கடலையின் விளைச்சல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அதே நேரத்தில் மத்திய அரசு, கொண்டைக் கடலை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த கொண்டைக் கடலையை, வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இதனால், தமிழகத்துக்கான கொண்டைக் கடலையின் வரத்தில், 70 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள், தற்போது அதிக அளவில் இதனை பதுக்கி வருகின்றனர். இதனால், அதன் விலை கிடுகிடு வென உயர்ந்து வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம், 45 ரூபாய்க்கு விற்பனையான கறுப்பு கொண்டைக் கடலை, தற்போது, 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.கொண்டைக் கடலையின் விலை உயர்ந்த தால், அதில் இருந்து தயார் செய்யப்படும் கடலை மாவு, பொட்டுக் கடலை (வறுகடலை), கடலை பருப்பு ஆகிய வற்றின் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
பொட்டுக்கடலை:கடந்த வாரம், 66 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ முதல் ரக கடலை பருப்பு, தற்போது 72 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் 60 ரூபாயில் இருந்து 68 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.அது போன்று, 88 ரூபாய் க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பொட்டுக் கடலை ஒரே நாளில் கிலோவுக்கு, 12 ரூபாய் உயர்ந்து, 100 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கடலை மாவு, 72 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடலை மாவு, கடலை பருப்பு, பொட்டுக் கடலை (வறுகடலை) ஆகியவற்றின் விலை உயர்வை அடுத்து இவற் றில் இருந்து தயார் செய்யப்படும், பஜ்ஜி, போண்டா, மிக்சர் உள்ளிட்ட கார வகைகள், இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பண்டிகை காலம்:சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த கொண்டைக் கடலை வியாபாரி அரசு கூறியதாவது:
தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த கொண்டைக் கடலையின் வரத்தில் கடும் சரிவு ஏற்பட் டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை, 85 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.இன்னும் இரண்டு மாதத்தில் பண்டிகை காலம் துவங்குகிறது. பெரிய வியாபாரிகள், இதை சாதகமாக பயன்படுத்தி, அதிக அளவில் கொண்டைக் கடலையை பதுக்கி வருகின்றனர். இதன் காரணமாக கொண்டைக் கடலை, கடலை பருப்பு, மாவு, பொட்டுகடலை (வறுகடலை) ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளன. இவ்வாறு அரசு கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|