பதிவு செய்த நாள்
21 ஜூலை2012
00:34
"
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று மோசமாக இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் சுணக்கமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை எப்படி இருக்குமோ என்ற அச்சப்பாடு மற்றும் ரிசர்வ் வங்கி, வங்கி கடனுக்கான விதிமுறை களை கடுமைப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற செய்தியாலும் பங்கு வர்த்தகம் மந்தமா கவே இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தில்,மோட்டார் வாகனம்,நுகர்வோர் சாதனங்கள்,உலோகம் மற்றும் நுகர்பொருட்கள் தவிர்த்த ஏனைய பெரும்பாலான துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 120.41 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17, 158.44 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக,17,275.20 புள்ளிகள் வரை யிலும், குறைந்தபட்சமாக, 17,129.69 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 24 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஆறு நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 37.60 புள்ளிகள் குறைந்து, 5,205.10 புள்ளி களில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,238.70 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்ச மாக, 5,197.50 புள்ளிகள்வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|