பதிவு செய்த நாள்
21 ஜூலை2012
13:44
ஜெர்மனி நாட்டை சேர்ந்த பி.எம்.டபிள்யூ., கார் நிறுவனம், சென்னையில் ஆறு ஆண்டுகளுக்கு முன் தொழிற்சாலையை துவக்கியது. இங்கு, 3 சிரீஸ், 5 சிரீஸ் மற்றும் எக்ஸ்1 மாடல் பி.எம்.டபிள்யூ., கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து, சென்னை தொழிற்சாலையில் அசெம்பள் செய்யப்படுகிறது. சமீபத்தில் சென்னை தொழிற்சாலையில், 25,000வது பி.எம்.டபிள்யூ., கார் உற்பத்தி செய்யப்பட்டு, புது சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளில், இந்த சாதனை அளவை தொட்டது பெரிய விஷயம் என்று நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக, விலை அதிகமான சொகுசு கார் விற்பனையில், பி.எம்.டபிள்யூ., நிறுவனம் தான் முதலிடத்தில் இருந்தது. ஜூன் மாதம், அந்த இடத்தை ஆடி கார் நிறுவனம் பிடித்து விட்டது. எனினும், இந்த ஆண்டு இறுதிக்கும் மீண்டும் முதலிடத்தை பிடிக்க, பி.எம்.டபிள்யூ., நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|