பதிவு செய்த நாள்
21 ஜூலை2012
14:49
மாருதி நிறுவனம் பழைய 800 காருக்கு பதிலாக புதிய 800 காரை தயாரித்துள்ளது. ஆல்ட்டோ 800 என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய காரை வரும் தீபாவளி பண்டிகையையொட்டி அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மானேசர் ஆலையில் நடந்த வன்முறை சம்பவத்தால், அந்த ஆலை காலவரையின்றி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பெரும் உற்பத்தி நெருக்கடியில் மாருதி சிக்கியுள்ளது. இதனால் தற்போது புதிய 800 சிசி காரின் அறிமுகத்தையும் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மாருதி மேலாண் இயக்குனர் சின்ஷோ பேசுகையில், புதிய 800 காரின் அறிமுகத்தை தள்ளி வைத்துள்ளோம். விரைவில் புதிய அறிமுக தேதி பற்றி முடிவு எடுப்போம் என்றார். அதிக மைலேஜ், அடக்கமான வடிவமைப்பு, மாருதி நம்பிக்கை என பல காரணங்களை வைத்து புதிய ஆல்ட்டோ 800 கார் மீது வாடிக்கையாளர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், நெருக்கடியால் புதிய 800 காரின் அறிமுகத்தை மாருதி தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது வாடிக்கையாளர் மத்தியில் சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|