தங்கம் விலையில் மாற்றமில்லை   தங்கம் விலையில் மாற்றமில்லை ... அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.4,785 கோடி குறைவு அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.4,785 கோடி குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய 800 காரின் அறிமுகம் தள்ளிவைப்பு: மாருதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2012
14:49

மாருதி நிறுவனம் பழைய 800 காருக்கு பதிலாக புதிய 800 காரை தயாரித்துள்ளது. ஆல்ட்டோ 800 என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய காரை வரும் தீபாவளி பண்டிகையையொட்டி அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மானேசர் ஆலையில் நடந்த வன்முறை சம்பவத்தால், அந்த ஆலை காலவரையின்றி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பெரும் உற்பத்தி நெருக்கடியில் மாருதி சிக்கியுள்ளது. இதனால் தற்போது புதிய 800 சிசி காரின் அறிமுகத்தையும் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மாருதி மேலாண் இயக்குனர் சின்ஷோ பேசுகையில், புதிய 800 காரின் அறிமுகத்தை தள்ளி வைத்துள்ளோம். விரைவில் புதிய அறிமுக தேதி பற்றி முடிவு எடுப்போம் என்றார். அதிக மைலேஜ், அடக்கமான வடிவமைப்பு, மாருதி நம்பிக்கை என பல காரணங்களை வைத்து புதிய ஆல்ட்டோ 800 கார் மீது வாடிக்கையாளர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், நெருக்கடியால் புதிய 800 காரின் அறிமுகத்தை மாருதி தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது வாடிக்கையாளர் மத்தியில் சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)