பதிவு செய்த நாள்
22 ஜூலை2012
02:05
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 13ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 87 கோடி டாலர் (4,785 கோடி ரூபாய்) குறைந்து, 28,675 கோடி டாலராக (15,77,125 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, முந்தைய 6ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 236 கோடி டாலர் (12,980 கோடி ரூபாய்) சரிவடைந்து, 28,762 கோடி டாலராக (15,81,910 கோடி ரூபாய்) குறைந்திருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 10 கோடி டாலர் குறைந்து, 25,453 கோடி டாலராக உள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தில் எவ்வித மாற்றமும் இன்றி, 2,576 கோடி டாலர் என்றளவிலேயே உள்ளது. எஸ்.டீ.ஆர். மதிப்பு, மூன்று கோடி டாலர் குறைந்து, 432 கோடி டாலராக உள்ளது. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 75 கோடி டாலர் குறைந்து, 212 கோடி டாலர் என்றளவில் உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட செலாவணிகளின் மதிப்பில் ஏற்பட்ட மாறுபாட்டால், கையிருப்பில் ள்ள அன்னிய செலாவணி குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|