சின்ன வெங்காயம் உற்பத்தி பாதிப்புசின்ன வெங்காயம் உற்பத்தி பாதிப்பு ... ஊதியம் ரூ.5 லட்சமாக இருந்தால் வரி தாக்கல் தேவையில்லை ஊதியம் ரூ.5 லட்சமாக இருந்தால் வரி தாக்கல் தேவையில்லை ...
மக்காச்சோளம் ஏற்றுமதி 35 லட்சம் டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2012
02:15

மும்பை:சென்ற, 2011-12ம் சந்தை பருவத்தில் (அக்.,-செப்.,), இந்தியாவின் மக்காச்சோளம் ஏற்றுமதி, 35 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, அமெரிக்க தானியங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.ஆசியாவில், மக்காச்சோளம் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. சீனா, மக்காச்சோளம் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தாலும், ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பே அதிகளவில் உள்ளது.
இந்தியாவிலிருந்து, மலேசியா, இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு, மக்காச்சோளம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்ற 2010-11ம் வேளாண் பருவத்தில், நாட்டின் மக்காச்சோளம் உற்பத்தி, 2.17 கோடி டன்னாகவும், இதன் ஏற்றுமதி, 32 லட்சம் டன் என்றளவிலும் இருந்தது. இந்தியாவில், இதன் பயன்பாடு, 1.70-1.80 கோடி டன் என்றளவில் உள்ளது.
நடப்பு வேளாண் பருவத்தில், மக்காச் சோளம் உற்பத்தி, 2.16 கோடி டன் என்றளவில், சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது, சர்வதேச அளவில், இந்திய மக்காச்சோளத்திற்கு அதிக விலை கிடைக்கிறது. இதையடுத்து, நடப்பு சந்தை பருவத்தில், இதன் ஏற்றுமதி, 35 லட்சம் டன்னாக அதிகரிக்கும், என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மக்காச்சோள வர்த்தகர்கள், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மலேசியா, வியட்நாம் மற்றும், இந்தோனேஷியாவை சேர்ந்த கால்நடை தீவன உற்பத்தியாளர்களுக்கு, அதிகளவில் இதனை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'நடப்பு வேளாண் பருவத்தில் இதுவரையிலுமாக, 31 லட்சம் டன் மக்காச்சோளம் ஏற்றுமதியாகியுள்ளது. அடுத்த இரு மாதங்களில், 4 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்படும்' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)