பதிவு செய்த நாள்
22 ஜூலை2012
02:30
ஐதராபாத்:உலகளவில், இந்தியாவின் மருந்து மற்றும் மருந்து பொருட்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. சர்வதேச தரத்திற்கேற்ப, இந்தியாவின் மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதால், பல நாடுகள் இந்திய மருந்துகளை அதிக அளவில் இறக்குமதி செய்து கொள்கின்றன.இவ்வகையில், வரும் 2014ம் ஆண்டில், நாட்டின் மருந்து ஏற்றுமதி, 2,500 கோடி டாலராக (1.37 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும். தற்போது, இந்தியாவின் மருந்து துறை, ஆண்டுக்கு, 25 சதவீதம் என்றளவில் வளர்ச்சிகண்டு வருகிறது என, இந்திய மருந்து பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைமை இயக்குனர் டாக்டர் பி.வி.அப்பாஜி தெரிவித்தார்.கடந்த 2011ம் ஆண்டில், நாட்டின் மருந்து ஏற்றுமதி, 30 சதவீதம் வளர்ச்சி கண்டு 1,300 கோடி டாலராக (71,500 கோடி ரூபாய்) இருந்தது.நம் நாட்டிலிருந்து, அமெரிக்கா, ஆப்ரிக்காஉள்ளிட்ட பல நாடுகளுக்கு, மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|