பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
00:32
xகுன்னூர்:குன்னூர் தேயிலை வர்த்தகத்தில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும், சென்ற ஆண்டு இதே காலத்தை விட, கூடுதலாக, 31.09 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்கம் சார்பில், வாரந்தோறும் தேயிலைத் தூள் ஏலம் நடத்தப்படுகிறது. இதில், உள்நாடு மற்றும் பாகிஸ்தான், ரஷ்யா போன்ற வெளிநாட்டு வர்த்தகர்கள் பங்கேற்பது வழக்கம். நடப்பாண்டு ஜூன் வரையில் நடைபெற்ற 26 ஏலங்களில், 2.49 கோடி கிலோ தேயிலைத் தூள் விற்பனை செய்யப்பட்டது. சராசரியாக ஒரு கிலோ 77.41 ரூபாய் வீதம் 192.75 கோடி ரூபாய்க்கு தேயிலைத் தூள் விற்பனையானது.கடந்தாண்டு, இதே காலத்தில் 2.47 கோடி கிலோ தேயிலைத் தூள், சராசரியாக கிலோ 65.45 ரூபாய் வீதம், விற்பனை செய்யப்பட்டு 161.66 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. இதனால், கணக்கீட்டு காலத்தில், 31.09 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|