பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
00:41
மும்பை:கரன்சி அச்சிடுவதில், 100 ரூபாயை காட்டிலும், 50 ரூபாய்க்கு அதிகம் செலவாவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கி அளித்துள்ள விவரம்:கடந்த 1967ம் ஆண்டிலிருந்து, ரூபாய் வடிவில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க, 0.47 பைசா செலவாகிறது. இது, பத்து ரூபாய்க்கு, 0.96 பைசாவாகவும், 20 ரூபாய்க்கு, 1.46 ரூபாயாகவும் உள்ளது.
இவற்றைத் தொடர்ந்து, 50 ரூபாய் நோட்டு அச்சடிக்க, 1.81 ரூபாய் செலாவகிறது. அதேசமயம், 100 ரூபாய் நோட்டு அச்சடிக்க 1.79 ரூபாய் செலவாகிறது. ஆக, 100 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் செலவை காட்டிலும், 50 ரூபாய் நோட்டுக்கு, கூடுதலாக, 0.2 பைசா செலவாகிறது. மேலும், 500 ரூபாய் நோட்டுக்கான செலவு, 3.58 ரூபாயாகவும், 1,000 ரூபாய் நோட்டுக்கான செலவு, 4.06 ரூபாயாகவும் உள்ளது.அதிக அளவில் பயன்படுத்தப்படும் 5, 10, 20, 50 ரூபாய் நோட்டுக்களின் ஆயுட் காலம், 100, 500, 100 ரூபாய் நோட்டுக்களை காட்டிலும் குறைவாகவே உள்ளது.
காகிதத்தால் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் அதிகளவில் கைமாறுவதால், குறைந்த காலத்திலேயே வீணாகி விடுன்றன. எனவே, ரிசர்வ் வங்கி, அச்சிடும் செலவை குறைக்கவும், நீடித்து உழைக்கும் வகையிலும், பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது.சோதனை அடிப்படையில், 100 கோடி பிளாஸ்டிக்/பாலிமர் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு, மைசூர், கொச்சி, ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதன் முடிவைப் பொறுத்து, நாட்டின் மற்ற இடங்களில் இவற்றின் அறிமுகம் இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|