பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
10:10
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 153.64 புள்ளிகள் குறைந்து 17004.80 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 42.55 புள்ளிகள் குறைந்து 5162.55 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று மோசமாக இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் சுணக்கமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை எப்படி இருக்குமோ என்ற அச்சப்பாடு மற்றும் ரிசர்வ் வங்கி, வங்கி கடனுக்கான விதிமுறை களை கடுமைப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற செய்தியாலும் பங்கு வர்த்தகம் மந்தமா கவே இருந்தது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின மதிப்பு ரூ.55.75 ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|