காசிமேட்டில் மீன் விலை கடும் உயர்வுகாசிமேட்டில் மீன் விலை கடும் உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பருப்பு ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி துவரம் பருப்பு குவிண்டால் ரூ.400 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2012
11:49

சேலம் : மத்திய அரசு பருப்பு ஏற்றுமதிக்கு அனுமதி அளித்ததால், வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்த பருப்பு வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து பருப்பு விலையிலும், உயர்வு ஏற்பட்டுள்ளது. தமிழக மில்களுக்கு தேவையான துவரை, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில் இருந்தும், விற்பனைக்கு வருகிறது. மத்திய அரசு, பருப்பு ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளதால், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தியாகும் பருப்பை, மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். வரத்து குறைவு இதனால், இந்த மாநிலங்களில் இருந்து, தமிழகம் உட்பட தென் மாநிலங்களுக்கு விற்பனைக்கு வந்த பருப்பு வரத்தில், கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள், தமிழகத்துக்கு விற்பனைக்கு அனுப்பிய பருப்பை, முற்றிலும் நிறுத்தி விட்டனர். இம்மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்த பருப்பு வகைகளின் வரத்தில் சரிவு ஏற்பட்டதால், அவற்றின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய சேலம் பருப்பு வியாபாரி சத்தியமூர்த்தி, ""தமிழகத்தில், துவரை, உளுந்து, பாசிப் பயறு விளைச்சல், எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களையே நம்ப வேண்டி உள்ளது. அந்த மாநிலங்களில் இருந்து, அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், தமிழகத்துக்கான வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால், அனைத்து ரக பருப்பின் விலையிலும், மேலும் உயர்வு ஏற்படும்,'' என்றார்.
விலை உயர்வு எவ்வளவு? * கடந்த வாரம், மொத்த விலையில் துவரம் பருப்பு குவிண்டால், 7,400 ரூபாயிலிருந்து, தற்போது 7,800 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் குவிண்டால், 7,000 ரூபாயிலிருந்து 7,400 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 6,700 ரூபாயிலிருந்து, 7,100 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. * சில்லரை விலையில், முதல் ரகம் கிலோ 82 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 78 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம் 75 ரூபாய்க்கும் விற்கிறது. * உளுத்தம் பருப்பின் விலை, குவிண்டாலுக்கு, 300 ரூபாய் உயர்வு ஏற்பட்டுள்ளது. சில்லரை விலையில், கிலோ 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. * பாசிப் பருப்பின் விலை, குவிண்டாலுக்கு, 200 ரூபாய் அதிகரித்து, 7,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில்லரை விலையில், இரண்டு ரூபாய் அதிகரித்து, கிலோ 72 ரூபாய்க்கு விற்கிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)