பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
23:14

கொச்சி: மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனம், சரக்கு பெட்டகம் மற்றும் மின் திட்டங்கள் போன்ற, மாற்று தொழில் நடவடிக்கைகளில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.அண்மையில் கொச்சியில் நடைபெற்ற வினியோகஸ்தர்கள் கூட்டத்தில், இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஐ.விஜயகுமார் கூறியதாவது:சென்னைக்கு அருகே உள்ள மணலியில், நிறுவனத்திற்கு சொந்தமாக, 130 ஏக்கர் நிலம் உள்ளது. இதை பயன்படுத்தி, சரக்கு பெட்டக முனையம் அமைக்கவும், மின் தயாரிப்பு திட்டங்களில் களமிறங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.எண்ணூர் துறைமுகத்திற்கு மிக அருகில் இந்த நிலம் அமைந்திருப்பது, சரக்கு பெட்டக முனையம் அமைப்பதற்கு, மேலும் அனுகூலமான ஒன்றாக உள்ளது. இம்மாற்று திட்டங்களுக்கான தொழில் கூட்டு பங்குதாரரை எதிர்நோக்கியுள்ளோம். நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 3,000 கோடி ரூபாய் விற்பனை வருவாயில், 180 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். சென்ற நிதியாண்டில், நிறுவனத்தின் விற்பனை வருவாய் 2,207 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 112 கோடி ரூபாயாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த மூன்று ஆண்டுகளாக, நிறுவனம், குறைந்த எரிபொருள் செலவில், 100 சதவீத முழு உற்பத்தி திறனை பயன்படுத்தி வருகிறது.இதன் காரணமாகவே, நிறுவனத்தின் நிகர லாபம் நல அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில், நிறுவனம் உட்பட, மூன்று உர தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே நாப்தாவை முக்கிய எரிபொருளாக கொண்டு இயங்கி வருகின்றன. எனவே, வரும் இரண்டு ஆண்டுகளுக்குள், எரிவாயுவிற்கு மாற நிறுவனம்திட்டமிட்டுள்ளது.மேலும், நிறுவனம், டீ.ஏ.பி., கலப்பு உரம் மற்றும் பொட்டாஷ் ஆகியவற்றை இறக்குமதி செய்து கொள்வதற்காக மத்திய அரசின் அனுமதியை வேண்டியுள்ளது. இது, நிறுவனத்தின் விற்பனை வருவாய் இலக்கை எட்டுவதற்குஉதவியாக அமையும்.இவ்வாறு விஜயகுமார் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|