பதிவு செய்த நாள்
24 ஜூலை2012
23:29
புதுடில்லி: நடப்பாண்டு மே மாதத்தில், யூரியா உற்பத்தி, 18.13 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என, மத்திய உர அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டின், ரசாயன உரங்களுக்கான தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிகமாக உள்ளது. எனவே, பற்றாக்குறையை சமாளிக்க, பல்வேறு நாடுகளிலிருந்து உரங்கள் இறக்குமதி செய்யப்படு கின்றன.உள்நாட்டில், சென்ற மே மாதத்தில், 16.70 லட்சம் டன், யூரியா உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதன் உற்பத்தி, 18.13 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், பல்வேறு மாநிலங்களுக்கு (இறக்குமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி), 19.77 லட்சம் டன் யூரியா அனுப்பப்பட்டுள்ளது. பயன்பாட்டிற்கான யூரியா இருப்பு, 26.30 லட்சம் டன் என்றளவில் உள்ளது.நடப்பு பருவத்தில், சென்ற மே மாதம் வரை, யூரியா விற்பனை, 20.87 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய பருவத்தில், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, (19.86 லட்சம் டன்) 5.08 சதவீதம் அதிகமாகும்.கணக்கீட்டு மாதத்தில், பயன்பாட்டிற்கு தேவையான டை அமோனியம் பாஸ்பேட் (டி.ஏ.பி.,), முரேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி.,) உரங்கள் முறையே, 11.13 லட்சம் டன் மற்றும் 2.49 லட்சம் டன் என்றளவில் உள்ளன. இது, மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவாகும்.சென்ற மே மாதம், ஓமன் நாட்டிலிருந்து, 1.44 லட்சம் டன் மற்றும் இதர நாடுகளிலிருந்து, 27,000 டன் என, ஒட்டுமெத்த அளவில், 1.71 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், டி.ஏ.பி., உரம், 3.11 லட்சம் டன்னும், எம்.ஒ.பி., உரம், 2.25 லட்சம் டன்னும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|