கிராம்டன் கிரீவ்ஸ் வருவாய் ரூ.211 கோடி கிராம்டன் கிரீவ்ஸ் வருவாய் ரூ.211 கோடி ... அப்ரோ டிரஸ்டை நம்ப வேண்டாம் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அப்ரோ டிரஸ்டை நம்ப வேண்டாம் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ...
யூரியா உர உற்பத்தி 18 லட்சம் டன்னாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2012
23:29

புதுடில்லி: நடப்பாண்டு மே மாதத்தில், யூரியா உற்பத்தி, 18.13 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என, மத்திய உர அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டின், ரசாயன உரங்களுக்கான தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிகமாக உள்ளது. எனவே, பற்றாக்குறையை சமாளிக்க, பல்வேறு நாடுகளிலிருந்து உரங்கள் இறக்குமதி செய்யப்படு கின்றன.உள்நாட்டில், சென்ற மே மாதத்தில், 16.70 லட்சம் டன், யூரியா உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதன் உற்பத்தி, 18.13 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், பல்வேறு மாநிலங்களுக்கு (இறக்குமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி), 19.77 லட்சம் டன் யூரியா அனுப்பப்பட்டுள்ளது. பயன்பாட்டிற்கான யூரியா இருப்பு, 26.30 லட்சம் டன் என்றளவில் உள்ளது.நடப்பு பருவத்தில், சென்ற மே மாதம் வரை, யூரியா விற்பனை, 20.87 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய பருவத்தில், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, (19.86 லட்சம் டன்) 5.08 சதவீதம் அதிகமாகும்.கணக்கீட்டு மாதத்தில், பயன்பாட்டிற்கு தேவையான டை அமோனியம் பாஸ்பேட் (டி.ஏ.பி.,), முரேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி.,) உரங்கள் முறையே, 11.13 லட்சம் டன் மற்றும் 2.49 லட்சம் டன் என்றளவில் உள்ளன. இது, மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவாகும்.சென்ற மே மாதம், ஓமன் நாட்டிலிருந்து, 1.44 லட்சம் டன் மற்றும் இதர நாடுகளிலிருந்து, 27,000 டன் என, ஒட்டுமெத்த அளவில், 1.71 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், டி.ஏ.பி., உரம், 3.11 லட்சம் டன்னும், எம்.ஒ.பி., உரம், 2.25 லட்சம் டன்னும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)