பதிவு செய்த நாள்
24 ஜூலை2012
23:30
xபுதுடில்லி: இந்தியாவில், தகவல் தொழில்நுட்பத்திற்காக செலவிடுவது, நடப்பாண்டில் 16.3 சதவீதம் அதிகரிக்கும் என இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.பொருளாதார ஏற்ற, இறக்கத்திலும், தகவல் தொழில்நுட்பத்திற்காக நிறுவனங்கள் செலவிடுவது, நடப்பாண்டில் 16.3 சதவீதம் உயர்ந்து, 4,357 கோடி டாலராக உயரும். இது, சென்ற 2011ம் ஆண்டு 3,746 கோடி டாலராக இருந்தது.தகவல் தொழில்நுட்பத் துறையின் மொத்த செலவினத்தில், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு, வரும் 2015ம் ஆண்டில் 43சதவீதமாக உயரும். இது, சென்ற ஆண்டு 38 சதவீதமாக இருந்தது.சென்ற ஆண்டில், தகவல் தொடர்பு மற்றும் ஊடகத் துறைகள், அரசுத் துறைகள், தயாரிப்புத் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகள் துறை ஆகியவை சார்ந்த நிறுவனங்கள் தான், அதிக அளவில் தகவல் தொழில்நுட்பத்திற்காக செலவிட்டுள்ளன. இது, ஆண்டு வளர்ச்சியில் 18 சதவீதமாகும்.சில்லரை, மொத்த விலை, எரிசக்தி மற்றும் சாதனங்கள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்புத் துறை ஆகியவற்றின் தகவல் தொழில்நுட்ப செலவினம் 23 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது என, அறிக்கையில் @மலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|