யூரியா உர உற்பத்தி 18 லட்சம் டன்னாக வளர்ச்சி யூரியா உர உற்பத்தி 18 லட்சம் டன்னாக வளர்ச்சி ... அப்ரோ டிரஸ்டை நம்ப வேண்டாம் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அப்ரோ டிரஸ்டை நம்ப வேண்டாம் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஏறுமுகத்தில் பருப்பு விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2012
23:31

சென்னை: சென்னையில் பருப்பு வகைகளின் விலை, இதுவரை காணாத வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த திடீர் விலை உயர்வு மேலும் தொடரும் என, வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.கொத்தவால்சாவடியில் இயங்கி வரும், உணவு தானிய மொத்த விற்பனை சந்தைக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களிலிருந்து உணவு தானியங்கள் வருகின்றன. கடந்த, 20 நாட்களாக துவரை, கடலை, உளுந்து, பாசி பருப்பு போன்ற பருப்பு வகைகளின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்த வண்ணம் இருக்கிறது.இதுகுறித்து கொத்தவால்சாவடி உணவு தானிய வியாபாரியான செந்தில்குமார் கூறியதாவது:கடந்தாண்டு இதே ஆடி மாதம், முதல் ரக துவரம் பருப்பு கிலோ 90 ரூபாய் வரை சென்றது. அதன் பின் விலை கட்டுக்குள் வந்தது.தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில், அனைத்து பருப்பு வகைகளின் விலையும் 30 முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட உளுத்தம் பருப்பு, தற்போது, 63 ரூபாயாக உயர்ந்துள்ளது. பாசிப்பருப்பு விலை, கிலோவுக்கு 15 ரூபாய் உயர்ந்து, 52 ரூபாயாகவும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட, ஒரு கிலோ கடலைப்பருப்பு 70 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.முதல் தர துவரம் பருப்பு ஒரு கிலோ 76 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரை 28 லிருந்து 35 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கோதுமை 17 லிருந்து 21 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் மொத்த விலையே. சில்லரை விலையில் ஐந்து ரூபாய் கூடுதலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)