பதிவு செய்த நாள்
24 ஜூலை2012
23:31
சென்னை: சென்னையில் பருப்பு வகைகளின் விலை, இதுவரை காணாத வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த திடீர் விலை உயர்வு மேலும் தொடரும் என, வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.கொத்தவால்சாவடியில் இயங்கி வரும், உணவு தானிய மொத்த விற்பனை சந்தைக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களிலிருந்து உணவு தானியங்கள் வருகின்றன. கடந்த, 20 நாட்களாக துவரை, கடலை, உளுந்து, பாசி பருப்பு போன்ற பருப்பு வகைகளின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்த வண்ணம் இருக்கிறது.இதுகுறித்து கொத்தவால்சாவடி உணவு தானிய வியாபாரியான செந்தில்குமார் கூறியதாவது:கடந்தாண்டு இதே ஆடி மாதம், முதல் ரக துவரம் பருப்பு கிலோ 90 ரூபாய் வரை சென்றது. அதன் பின் விலை கட்டுக்குள் வந்தது.தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில், அனைத்து பருப்பு வகைகளின் விலையும் 30 முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட உளுத்தம் பருப்பு, தற்போது, 63 ரூபாயாக உயர்ந்துள்ளது. பாசிப்பருப்பு விலை, கிலோவுக்கு 15 ரூபாய் உயர்ந்து, 52 ரூபாயாகவும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட, ஒரு கிலோ கடலைப்பருப்பு 70 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.முதல் தர துவரம் பருப்பு ஒரு கிலோ 76 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரை 28 லிருந்து 35 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கோதுமை 17 லிருந்து 21 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் மொத்த விலையே. சில்லரை விலையில் ஐந்து ரூபாய் கூடுதலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|