பதிவு செய்த நாள்
24 ஜூலை2012
23:33
சென்னை: "உன்னை போல், என்னைப் போன்ற பெண்களுக்கு உதவுபவர்கள்' என்ற விளம்பரத்துடன் மகளிர் ”ய உதவிக்குழுக்களுக்கு நிதி உதவி வழங்கி வரும் நடவடிக்கையில் அப்ரோ டிரஸ்ட் குழும நிறுவனங்கள்செயல்பட்டுவருகின்றன. இந்நிறுவனங்களை நம்ப வேண்டாம் என ரிசர்வ் வங்கிஎச்சரிக்கை விடுத்துள்ளது."அப்ரோ டிரஸ்ட் என்ற நிறுவனம், ரிசர்வ் வங்கியின் பெயரை தவறாக பயன்படுத்தி செய்யும் விளம்பரங்களை நம்பி, பொதுமக்கள் அந்த டிரஸ்டுடன் வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம்,' என, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:அப்ரோ டிரஸ்ட் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள், எண் 27/49, 5வது மெயின் ரோடு, 3வது லே -அவுட், ஆசிரியர்கள் குடியிருப்பு, கொளத்தூர், சென்னை-99 என்ற முகவரியில் இயங்கி வருகின்றன. அவை, www.aphrofin.com என்ற இணையதளத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்குட்பட்டு கடன் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளன.இந்த டிரஸ்ட், ரிசர்வ் வங்கியின் பெயரை, உரிய அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தி வருவது வங்கியின் கவனத்துக்கு வந்துள்ளது. அப்ரோ டிரஸ்ட் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியால் நெறிமுறைப்படுத்தப்படவில்லை.மேலும், இந்த நிறுவனங்கள்மின்னணு ஊடகங்கள் மூலம் செய்யும் விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இந்நிறுவனங்களுடன் யாரும் பரிவர்த்தனை செய்ய வேண்டாம். அவ்வாறு செய்து கொண்டால், அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பாவர். இவ்வாறு, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|