அலுமினிய பாத்திரங்கள் விலை அதிகரிப்பு .அலுமினிய பாத்திரங்கள் விலை அதிகரிப்பு . ... பெட்ரோல், டீசல் விலை திடீர் குறைப்பு பெட்ரோல், டீசல் விலை திடீர் குறைப்பு ...
வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் கொத்தவரை முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2012
23:34

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை, அதி முக்கியத்துவம் பெறாத வேளாண் பொருளாக விளங்கிய கொத்தவரை, திடீரென்று, நாட்டின் மிக முக்கிய ஏற்றுமதி பொருளாக உருவெடுத்துள்ளது. கொத்தவரை விதை, பல்வேறு தொழில்களில் பிரதானப் பொருளாக பயன்படுவதால், இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில்,நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில்(89,341 கோடி ரூபாய்), கொத்தவரையின் பங்களிப்பு 20 சதவீதம் உயர்ந்து, 16,356 கோடி ரூபாயாக மிகவும் அதிகரித்துள்ளது.இதே காலத்தில், ஏற்றுமதியை பொறுத்தவரை, பாசுமதி அரசியின் பங்களிப்பு 18.7 சதவீதம் (15,450 கோடி ரூபாய்) மற்றும் சாதாரண அரிசியின் பங்களிப்பு 10.5 சதவீதம் (8,668 கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளன.ஆக, சென்ற நிதியாண்டில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் கொத்தவரை முதலிடத்தை பிடித்துள்ளது.முந்தைய 2010-11ம் நிதியாண்டில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், கொத்தவரையின் பங்களிப்பு 7 சதவீத அளவிற்கே இருந்தது. அதே சமயம், இதே காலத்தில், பாசுமதி அரிசி ஏற்றுமதி 27.2 சதவீதமாக இருந்தது. சாதாரண அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.கடந்த 2007-08ம் ஆண்டில், மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், பாசுமதி அரிசியின் பங்களிப்பு 9.3 சதவீதமாகவும், சாதாரண அரிசி 5.4 சதவீதமாகவும்,கொத்தவரையின் பங்களிப்பு 1.4 சதவீதம் என்ற அளவிலும் இருந்தன.ராஜஸ்தானில் கொத்தவரை அதிகம் விளைகிறது. இதில் காணப்படும் பசைப்பொருள், எண்ணெய் கிணறுகளின் துரப்பணப் பணியின் போது பயன்படுத்தப்படுகிறது. இந்த கொத்தவரை பசை, இலகு வாக துளையிட உதவுகிறது. எனவே, கொத்தவரையை, மேற்கத்திய நாடுகள், இந்தியாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளன.இதன் காரணமாக, சென்ற நிதியாண்டில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி முந்தைய நிதியாண்டை விட, இரு மடங்கு உயர்ந்து 41,794 கோடியில் இருந்து 89,341 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.தற்போது, வேளாண்பொருட்கள் ஏற்றுமதியில், கொத்தவரை, பாசுமதி அரிசி, சாதாரண அரிசி ஆகிய மூன்று பொருட்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. பாசுமதி அரிசி மற்றும்சாதாரண அரிசி ஏற்றுமதியை ஊக்குவிக்க, மத்திய அரசு பல வகைகளில் உதவி வருகிறது. ஆனால், அரசின் உதவியின்றி கொத்தவரை விதை அமோகமாக ஏற்றுமதியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)