வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் கொத்தவரை முதலிடம் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் கொத்தவரை முதலிடம் ... பெட்ரோல், டீசல் விலை திடீர் குறைப்பு பெட்ரோல், டீசல் விலை திடீர் குறைப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் தொடங்கியது வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2012
10:34

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 68.24 புள்ளிகள் குறைந்து 16849.84 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17.40 புள்ளிகள் குறைந்து 5110.80 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. காலையில், மந்தமாக காணப்பட்ட பங்கு வர்த்தகம் மதியத்திற்கு பிறகு, சற்று சூடுபிடித்து காணப்பட்டது. குறிப்பாக, நுகர் பொருட்கள் துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் சிறப்பான காலாண்டு முடிவுகள் "சென்செக்ஸ்' அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்தன.இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஜெர்மனியின் தயாரிப்பு துறை வளர்ச்சி சரிவு கண்டுள்ள செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், இன்போசிஸ், ஸ்டெர்லைட்இந்தியா, டாட்டாபவர், பீ.எச்.இ.எல்., பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், மாருதி, பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப், எஸ்.பீ.ஐ., டாக்டர் ரெட்டீஸ் நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.56.29ஆக இருந்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)