பதிவு செய்த நாள்
25 ஜூலை2012
10:34
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 68.24 புள்ளிகள் குறைந்து 16849.84 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17.40 புள்ளிகள் குறைந்து 5110.80 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. காலையில், மந்தமாக காணப்பட்ட பங்கு வர்த்தகம் மதியத்திற்கு பிறகு, சற்று சூடுபிடித்து காணப்பட்டது. குறிப்பாக, நுகர் பொருட்கள் துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் சிறப்பான காலாண்டு முடிவுகள் "சென்செக்ஸ்' அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்தன.இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஜெர்மனியின் தயாரிப்பு துறை வளர்ச்சி சரிவு கண்டுள்ள செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், இன்போசிஸ், ஸ்டெர்லைட்இந்தியா, டாட்டாபவர், பீ.எச்.இ.எல்., பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், மாருதி, பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப், எஸ்.பீ.ஐ., டாக்டர் ரெட்டீஸ் நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.56.29ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|