பதிவு செய்த நாள்
25 ஜூலை2012
23:51
சென்னை:ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்றைய வர்த்தகத்தில், 288 ரூபாய் அதிகரித்து, 22,480 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை, 36 ரூபாய் அதிகரித்து, 2,810 ரூபாயாக அதிகரித்திருந்தது.கடந்த ஒரு சில தினங்களாக, தங்கத்தின் விலை அதிகமாற்றமின்றி காணப்பட்டது. இந்நிலையில், டாலருக்குஎதிரான ரூபாயின் வெளிமதிப்பு, சரிவடைந்து வருவதாலும், பண்டிகை காலம் நெருங்கி வருவதாலும், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே, நேற்று தங்கத்தின் விலை,அதிகரித்தது என, சென்னை தங்க ஆபரணவர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில், ஒரு கிலோ வெள்ளியின் விலை 430 ரூபாய் அதிகரித்து, 52,690 ஆக அதிகரித்து காணப்பட்டது. அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 56.16 ஆக மிகவும் சரிவடைந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|