பதிவு செய்த நாள்
25 ஜூலை2012
23:53
நடப்பாண்டில், உலகளவில், இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகரித்துள்ளது.அதேசமயம், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால் மோட்டார் வாகனத் துறையில், மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், டயர் தயாரிப்பும் சரிவடைந்து, ரப்பருக்கான தேவையும் குறைந்துள்ளது என, சர்வதேச ரப்பர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொச்சி சந்தை:கடந்த 15 மாதங்களுக்கு முன்பாக, உள்நாட்டில், ஒரு கிலோ இயற்கை ரப்பரின் விலை 240 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 180 ரூபாயாக மிகவும் குறைந்துள்ளது. அதேசமயம், பாங்காக் சந்தையில், இதன் விலை 168 ரூபாயாக உள்ளது.
இது குறித்து, கொச்சி மற்றும் கோட்டயத்தைச் சேர்ந்த ரப்பர் வர்த்தகர்கள் கூறும்போது, ' சர்வதேச அளவில் ரப்பர் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதேசமயம், இதற்கான தேவை குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, கொச்சி சந்தையில், ஒரு கிலோ ரப்பர் 190 ரூபாயாக இருந்தது.இது, மே மாத முதல் வாரத்தில், 196 ரூபாயாகவும், ஜனவரி மாதத்தில், 200 ரூபாயாகவும் இருந்தது. தேவை குறைந்துள்ளதையடுத்து, இதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது' என்று தெரிவித்தனர்.
தாய்லாந்து:நடப்பு 2012 - 13ம் நிதியாண்டில், சர்வதேச ரப்பர் உற்பத்தி, 109 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப் பிடப் பட்டுள்ளது. இது, முதல் மதிப்பீட்டில், 100 லட்சம் டன்னாக இருக்கும் எனஎதிர்பார்க்கப்பட்டது. உலகளவில், ரப்பர் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் ரப்பர் உற்பத்தி, 32.60 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மலேசியாவின் ரப்பர் உற்பத்தி, 10 லட்சம் டன்னாகவும், வியட்நாமின் உற்பத்தி 9.15 லட்சம் டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் ரப்பர் உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், உலக ளவில் இதன் விலை மேலும் சரிவடையக்கூடும் என, கொச்சி ரப்பர் வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.உலக சந்தைகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில், ரப்பரின் விலை, கிலோவுக்கு 11 ரூபாய் அதிகமாக உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, இதர, ரப்பர் உற்பத்தி நாடுகள், இந்தியாவிற்கு, இதனை ஏற்றுமதி செய்வதில்ஆர்வம் காட்டி வருகின்றன.
ரப்பர் இறக்குமதி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்,நாட்டின் இயற்கை ரப்பர் இறக்குமதி,21,189டன்னாக அதி கரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில்,19,118 டன்னாக இருந்தது. கடந்த 2011-12ம் நிதியாண் டில், 2.05 லட்சம் டன்னாக இருந்த இறக்குமதி, நடப்பு 2012 - 13ம் நிதியாண்டில், 2.50 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு ஜூலை மாதத்தில் மட்டும் இதன் இறக்குமதி 20 ஆயிரம் டன்னாக இருக்கும் என கோட்டயத்தைச் சேர்ந்த ரப்பர் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|