பதிவு செய்த நாள்
25 ஜூலை2012
23:55
புதுடில்லி:மத்திய அரசு, குறிப்பிட்ட சில, வேளாண் பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகத்திற்கு, தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.நாட்டின் பல பாகங்களில், மழைப் பொழிவு குறைந்துள்ளதையடுத்து, நடப்பு ஆண்டில், வேளாண் உற்பத்தி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கருத் தில் கொண்டு, குறிப்பிட்ட வேளாண் பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகத்திற்கு தடை விதிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
தற்போது, உளுந்து, துவரை மற்றும் அரிசி ஆகிய வேளாண் பொருட்கள் மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கோதுமை, சர்க்கரை, சோயா எண்ணெய், கடுகு, சோயா வித்துக்கள் போன்றவற்றின் மீது முன்பேர வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, உள்நாட்டில், தேசிய அளவில் ஐந்து முன்பேர சந்தைகளும், மண்டல அளவில், 16 முன்பேர சந்தைகளும் உள்ளன. இவற்றை, எப்.எம்.சி. என்று சுருக்கமாக அழைக்கப் படும், பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன் என்ற அமைப்பு நெறிமுறைப்படுத்தி வருகிறது.
அண்மைக் காலமாக,உருளைக் கிழங்கு,கொண்டைக் கடலை,சோயாபீன்ஸ்,சோயா எண் ணெய் மற்றும் கடுகு ஆகியவற்றின் விலை உயர்வு குறித்து, எப்.எம்.சி. அமைப்பு கண்காணித்து வருகிறது. இவற்றின் விலை, மிகவும்அதிகரிக்கும் பட்சத்தில், முன்பேர வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்படும் என, தெரிகிறது.
இது வரையிலுமாக, நாட்டின் பல மாநிலங்களில், பருவ மழை22 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், நடப்பு கரீப் பருவத்தில், நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் விதைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இவற்றின் விலை உயராமல், சீராக வைத்திருக்க மத்திய அரசு, விரும்புகிறது.நடப்பாண்டு ஜூன் மாதம் வரையிலுமாக, முன்பேர சந்தைகளில், 41.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை விட (38.29 லட்சம் கோடி ரூபாய்), 8.95 சதவீதம் அதிகம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|