தேவை குறைவு, உற்பத்தி அதிகரிப்பால்...சர்வதேச அளவில் இயற்கை ரப்பர் விலையில் சரிவு நிலைதேவை குறைவு, உற்பத்தி அதிகரிப்பால்...சர்வதேச அளவில் இயற்கை ரப்பர் ... ... இயற்கை எரிவாயு உற்பத்தி குறைந்தது இயற்கை எரிவாயு உற்பத்தி குறைந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
முன்பேர வர்த்தகத்தில் சில வேளாண் பொருட்களுக்கு தடை?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2012
23:55

புதுடில்லி:மத்திய அரசு, குறிப்பிட்ட சில, வேளாண் பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகத்திற்கு, தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.நாட்டின் பல பாகங்களில், மழைப் பொழிவு குறைந்துள்ளதையடுத்து, நடப்பு ஆண்டில், வேளாண் உற்பத்தி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கருத் தில் கொண்டு, குறிப்பிட்ட வேளாண் பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகத்திற்கு தடை விதிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
தற்போது, உளுந்து, துவரை மற்றும் அரிசி ஆகிய வேளாண் பொருட்கள் மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கோதுமை, சர்க்கரை, சோயா எண்ணெய், கடுகு, சோயா வித்துக்கள் போன்றவற்றின் மீது முன்பேர வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, உள்நாட்டில், தேசிய அளவில் ஐந்து முன்பேர சந்தைகளும், மண்டல அளவில், 16 முன்பேர சந்தைகளும் உள்ளன. இவற்றை, எப்.எம்.சி. என்று சுருக்கமாக அழைக்கப் படும், பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன் என்ற அமைப்பு நெறிமுறைப்படுத்தி வருகிறது.
அண்மைக் காலமாக,உருளைக் கிழங்கு,கொண்டைக் கடலை,சோயாபீன்ஸ்,சோயா எண் ணெய் மற்றும் கடுகு ஆகியவற்றின் விலை உயர்வு குறித்து, எப்.எம்.சி. அமைப்பு கண்காணித்து வருகிறது. இவற்றின் விலை, மிகவும்அதிகரிக்கும் பட்சத்தில், முன்பேர வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்படும் என, தெரிகிறது.
இது வரையிலுமாக, நாட்டின் பல மாநிலங்களில், பருவ மழை22 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், நடப்பு கரீப் பருவத்தில், நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் விதைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இவற்றின் விலை உயராமல், சீராக வைத்திருக்க மத்திய அரசு, விரும்புகிறது.நடப்பாண்டு ஜூன் மாதம் வரையிலுமாக, முன்பேர சந்தைகளில், 41.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை விட (38.29 லட்சம் கோடி ரூபாய்), 8.95 சதவீதம் அதிகம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)