பதிவு செய்த நாள்
25 ஜூலை2012
23:58
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகள் சுணக்கம் கண்டன.குறிப்பாக, கிரீஸ் நாடு, அதன் நிதிப் பற்றாக் குறையை குறைப்பதற் கான இலக்கை எட்டுவது கடினம் என்ற செய்தியால்,இதர ஆசிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் மந்தமடைந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகளில் பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், நுகர்வோர் சாதனங்கள், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கை மாறின. இருப்பினும், நுகர் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், மருந்து ஆகிய துறை களை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தை யின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 72.03 புள்ளிகள் சரிவடைந்து, 16,846.05 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 16,899.01 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,736.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஒன்பது நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 18.60 புள்ளிகள் குறைந்து, 5,109.60 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,121.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்ச மாக, 5,076.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|