பதிவு செய்த நாள்
26 ஜூலை2012
10:38
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.61 புள்ளிகள் அதிகரித்து 16859.66 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 2.60 புள்ளிகள் அதிகரித்து 5112.20 புள்ளிகளோடு காணப் பட்டது. பங்கு வர்த்தகம் நேற்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகள் சுணக்கம் கண்டன.குறிப்பாக, கிரீஸ் நாடு, அதன் நிதிப் பற்றாக் குறையை குறைப்பதற் கான இலக்கை எட்டுவது கடினம் என்ற செய்தியால்,இதர ஆசிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் மந்தமடைந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகளில் பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்ப ரூ.56.03 ஆக இருந்தது
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|