பதிவு செய்த நாள்
26 ஜூலை2012
12:01
ஜப்பானின் பிரபலமான வாகன நிறுவனமான இசுசூ, உலகளவில் யுடிலிட்டி வைக்கிள் வாகனங்களையும், சரக்கு வாகனங்களையும் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில், அசோக் லேலாண்டு மற்றும் ஸ்வராஜ் குழுமத்துடன் இணைந்து செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனம் இந்தியாவில் தனியாக செயல்பட திட்டமிட்டுள்ளது. இதற்காக, ரூ.1,000 கோடி செலவில், ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்களுக்கு மேல் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலையை, 2014 -15ம் ஆண்டில், துவக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே ஆந்திர மாநில அரசுடன் இசுசூ நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. அதே நேரத்தில், குஜராத் மற்றும் தமிழக அரசுகளுடனும் பேச திட்டமிட்டுள்ளது. இசுசூ நிறுவனம் முயற்சி எடுத்துள்ளதை, ஆந்திர முதன்மை செயலாளர்( தொழிற்சாலை) பிரதீப் சந்திராவும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவில், "டி -மாக்ஸ்' பிக் அப் என்ற சரக்கு வாகனத்தையும், தாய்லாந்து மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள எம்யு7 என்ற எஸ்.யு.வி., காரையும் அறிமுகப்படுத்த இசுசூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார், டொயோட்டாவின் ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு நிறுவனத்தின் என்டீவர் கார்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|