பதிவு செய்த நாள்
29 ஜூலை2012
04:53
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 20ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 59 கோடி டாலர் (3,245 கோடி ரூபாய்) உயர்ந்து, 28,733 கோடி டாலர் (15,80,315 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இது, சென்ற 13ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 87 கோடி டாலர் (4,785 கோடி ரூபாய்) குறைந்து, 28,674 கோடி டாலராக (15,77,070 கோடி ரூபாய்) குறைந்து காணப்பட்டது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வாரத்தில், அன்னியச் செலவாணிகளின் சொத்து மதிப்பு, 56.55 கோடி டாலர் (3,110 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலவாணிகளின் சொத்து மதிப்பு, 213 கோடி டாலர் (11,715 கோடி ரூபாய்) என்றளவில் உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட செலாவணிகளின் மதிப்பில் ஏற்பட்ட மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணி அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|