பதிவு செய்த நாள்
29 ஜூலை2012
04:54
கம்பம்:ஏலக்காய், ஏலத்தில் புதிய முறையை கையாள, நறுமணப் பொருட்கள் வாரியம் திட்டமிட்டுள்ளது. நிபந்தனைகளின்படி, யார் வேண்டு மானாலும் ஏலத்திற்கான உரிமம் பெறலாம்.நறுமணப் பொருட்களில், ஏலக்காய் விற்பனை மட்டும், நறுமணப் பொருட்கள் வாரியத்தின் அனுமதி பெற்ற மையங்களில், பதிவு அடிப்படையில் நடக்கிறது. இடுக்கி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் ஏலக்காய்,புத்தடி என்ற இடத்தில் உள்ள விற்பனை மையத்தில், ஏலம் விடப்படும்.
ஒவ்வொரு நாளும், ஒரு நிறுவனத்தினர் ஏலம் நடத்துவர்.ஏலம் நடத்த அனுமதி கேட்டு நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள், வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தன. பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த விண்ணப்பங்களை, வாரியம் பரிசீலனை செய்து வருகிறது. உரிமம் வழங்க புதிய முறையை அமல்படுத்த வாரியம் திட்டமிட்டுள்ளது.நிபந்தனைகளின்படி தனி நபர், அமைப்புகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையும் நடைமுறைப்படுத்தப்படும். வடமாநில வியாபாரிகளின் வேண்டுகோளின்படி, டில்லியில் ஏலம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|