பதிவு செய்த நாள்
29 ஜூலை2012
04:56
சென்னை:சர்வதேச பொருளாதார மந்த நிலையால்,நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி குறைந்துள்ளது. இந்நிலையில், சென்ற காலாண்டில், சென்னையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 30 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய காலாண்டில் மேற்கொள்ளப்பட்டஏற்றுமதியை விட, (27,000 கோடி ரூபாய்)11 சதவீதம் அதிகமாகும்.சென்னை, மோட்டார் வாகனங்கள் தயாரிப்பிற்கு முக்கிய மையமாகத் திகழ்கிறது. இதனால், சென்னையிலிருந்து அதிகளவில் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மதிப்பீட்டு காலாண்டில், சென்னையிலிருந்து, புதிய சந்தைகளாக கண்டறியப்பட்டுள்ள இலங்கை, தென் ஆப்ரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்தை அடுத்து, ஒட்டுமொத்த அளவில், சென்னையிலிருந்து, மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.ஏற்றுமதியாளர்கள், செலுத்திய வரியை திரும்ப பெறுவதற்கான சலுகையால், ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, திரும்ப அளித்த வரி, 400 கோடி ரூபாயிலிருந்து, 700 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, சென்னை சுங்க வரி முதன்மை ஆணையர் மாலா ஸ்ரீவத்சவ் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|