பதிவு செய்த நாள்
29 ஜூலை2012
05:02
புதுடில்லி:உணவு தானியங்களை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதிகள் இல்லாததால், மத்திய அரசு, ஏழுலட்சம் டன் கோதுமையை, வெளிச் சந்தையில் மானிய விலையில் விற்பனை செய்துள்ளது. இந்தியா, கடந்த சில ஆண்டுகளாக, உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்து வருகிறது. ஆனால், கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்களை சேமிக்க போதுமான கிடங்கு வசதிகள் இல்லாத நிலை உள்ளது.
முகமை அமைப்புகள்:நாட்டில், 6.40 கோடி டன் உணவு தானியங்களை சேமித்து வைக்கும் அளவிற்கே கிடங்கு வசதி உள்ளது. ஆனால், மத்திய அரசின் முகமை அமைப்புகள், இதை விட அதிகமாக, அதாவது 8.20 டன் உணவு தானியங்களை கொள்முதல் செய்துள்ளன.
அதனால், திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள பல கோடி டன் உணவுதானியங்கள் மழை, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாழாகின்றன. இதை தடுக்கும்பொருட்டு, மத்திய அரசு, கோதுமை, பாசுமதி அரிசி, சாதாரண அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இத்துடன், சென்ற மாதம், மத்திய அமைச்சரவைக் குழு, 30 லட்சம் டன் கோதுமையை, வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கியது.
இதன்படி, நடப்பு ஜூலை மாதம், முதற்கட்டமாக 13 லட்சம் டன் கோதுமையை விற்பனைக்கு அனுப்ப மத்திய உணவு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. 'இதில் 6.99 லட்சம் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டுள்ளது' என, உணவு அமைச்சக
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ், பஞ்சாப் (1.01 லட்சம் டன்), ஆந்திரா (18,978 டன்),மேற்குவங்கம் (11,563 டன்), சட்டீஸ்கர் (10,823 டன்), அசாம் (10,186 டன்), ராஜஸ்தான் (5,234 டன்) மற்றும் ஜார்கண்ட் (400 டன்) ஆகிய மாநிலங்களுக்கான ஒதுக்கீடு முடிவடைந்து விட்டது.'இந்த மாநிலங்களில் மூன்றாவது மற்றும் நான்காம் கட்ட விற்பனைக்கான ஒப்பந்தபுள்ளிகள் கோரப்படமாட்டாது' என, அந்த அதிகாரி மேலும் கூறினார்.
விற்பனை விலை:மத்திய அரசு, பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக, ஒரு குவிண்டால் கோதுமையை 1,822 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. ஆனால், கிடங்கு பற்றாக்குறை காரணமாக, தற்போது வெளிச்சந்தையில் ஒரு குவிண்டால் கோதுமையை 1,170 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.இது, மானிய விலையில் கொள்முதல் செய்யப்பட்டதை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|