கிடங்கு வசதி இல்லாததால்ஏழு லட்சம் டன் கோதுமை விற்பனைகிடங்கு வசதி இல்லாததால்ஏழு லட்சம் டன் கோதுமை விற்பனை ... ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளோருக்கு தனி உப்பு உற்பத்தி: அரசு நிறுவனம் திட்டம் ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளோருக்கு தனி உப்பு உற்பத்தி: அரசு நிறுவனம் ... ...
அரிசி, பருப்பு, எண்ணெய் விலை அதிகரிப்பால்...ஓட்டல்களில் உணவு பண்டங்கள் விலை உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2012
05:03

தமிழகத்தில் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் விலை உயர்வு காரண மாக, ஆகஸ்ட் 1 முதல் ஓட்டல்களில் சாப்பாடு, சிற்றுண்டி வகைகளின் விலையை உயர்த்த ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.அரிசி விலை கடந்த மாதத்தை விட, நான்கு ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வில் இட்லி அரிசியும் தப்பவில்லை. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றின் விலை, கடந்த மாதத்தை விட, கிலோவுக்கு, 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
கடலை மாவு:கடலை பருப்பு, கடலை மாவு, கொண்டக்கடலை ஆகியவற்றின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. ஓட்டல் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் மைதா விலை, கிலோவுக்கு, 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.வேர்க்கடலை, பொட்டு கடலை, மிளகு, கடுகு, சீரகம், சோம்பு மட்டுமின்றி வெல்லம், சர்க்கரை ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. ஆடிமாதம் என்பதால், காய்கறிகள் விலை கட்டுக்குள் இருந்தாலும், ஆவணியில் உயரும், என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வு:உணவு பண்டங்கள் தயாரிக்கும் சமையல்காரர்களின் சம்பள உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றால், ஓட்டல் உரிமையாளர்கள், சாப்பாடு மற்றும் சிற்றுண்டி வகையறாக்களின் விலையை உயர்த்த உள்ளனர். கடந்த மாதம் ஓட்டல்களில் சாப்பாடு விலை உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 1 முதல் விலை உயர உள்ள உணவுப் பொருட்களின் விவரம்:
சேலத்தில், 40 ரூபாய்க்கு விற்கும் அளவு சாப்பாடு, 45 ரூபாயாகவும், ஸ்பெஷல் சாப்பாடு, 45 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாகவும் உயர்கிறது. சில ஓட்டல்:களில் அளவு சாப்பாடு, 55 ரூபாயாகவும், ஸ்பெஷல் சாப்பாடு, 70 ரூபாயாகவும், பார்சல் சாப்பாடு, 85 ரூபாயாகவும் உயர்த்தப்படவுள்ளது.
பொங்கல்எலுமிச்சை, புளியோதரை, தக்காளி, தயிர், வெஜிடபிள்பிரியாணி ஆகியவற்றின் விலையை, 22 ரூபாயிலிருந்து, 25 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது.சிற்றுண்டி வகைகளில் இரண்டு இட்லி, 15 லிருந்து, 17 ரூபாயாகவும், சாதா தோசை, 20 லிருந்து, 25 ரூபாயாகவும், வடை, 10 ரூபாயில் இருந்து, 12 ரூபாயாகவும், பொங்கல், 25 லிருந்து, 30 ரூபாயாகவும், ஊத்தப்பம், 25 ரூபாயில் இருந்து, 28 ரூபாயாகவும், மூன்று பூரி, 24 ரூபாயில் இருந்து, 27 ரூபாயாகவும், சப்பாத்தி, 25 ரூபாயில் இருந்து, 30 ரூபாயாகவும், பரோட்டா, 25 ரூபாயில் இருந்து, 30 ரூபாயாகவும், சில்லி பரோட்டா, 32 ரூபாயில் இருந்து, 35 ரூபாயாகவும் உயர்கிறது.
கூடுதல் விலை:நடுத்தர ஓட்டல் ஒன்றில் எடுக்கப்பட்டுள்ள, இந்த விலை விவரத்தை விட, நகரின் முக்கிய இடங்களில் செயல்படும் ஓட்டல்களில், சிற்றுண்டி வகைகளும், 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், சேலத்தை தவிர பிறநகரங்களில் கடந்த வாரமே விலை உயர்த்தப்பட்டு விட்டது.ஓட்டல் தொழிலை காப்பாற்றும் வகையில், வரும்1ம் தேதி முதல் சாப்பாடு, சிற்றுண்டி வகைகளின் விலையை உயர்த்த உள்ளோம் என்றார்.- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)