ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளோருக்கு தனி உப்பு உற்பத்தி: அரசு நிறுவனம் திட்டம்ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளோருக்கு தனி உப்பு உற்பத்தி: அரசு நிறுவனம் ... ... வரத்து குறைந்ததால் கருவாடு விலை உயர்வு வரத்து குறைந்ததால் கருவாடு விலை உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
மஞ்சள் சாகுபடி குறைவு: விலை அதிகரிக்க வாய்ப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2012
13:50

ஈரோடு: போதிய மழையின்றி, ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் நடவு குறைந்துள்ளது. கடந்தாண்டு விளைச்சல் அதிகமிருந்தும் விலை குறைந்ததால், இந்தாண்டு விலை அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மஞ்சள் உணவு பொருளாகவும், அழகு சாதனம், கிருமி நாசினியாகவும் பயன்பட்டு வருகிறது. தமிழக அளவில் மஞ்சள் சாகுபடியில் ஈரோடு மாவட்டம் முதன்மை பெற்றுள்ளது. கடந்த, 2010ல் மஞ்சள் குவிண்டால், 17 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. தங்கத்தை விட மஞ்சளுக்கு மவுசு அதிகம் இருந்ததால், எட்டு மாத பயிரான மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர். ஈரோடு மாவட்டத்தில், 2010ல், 11 ஆயிரத்து, 300 ஹெக்டேர் பரப்பளவுக்கு மஞ்சள் சாகுபடி நடந்தது. 2011ல் மேட்டூர் அணை முன்னதாக திறப்பு, காலிங்கராயன் வாய்க்கால் திறப்பு என நீர்ஆதார வசதி அதிகமிருந்ததால்,, 12 ஆயிரத்து, 600 ஹெக்டேர் அளவுக்கு மஞ்சள் சாகுபடி நடந்தது. ஆனால், விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.

மஞ்சள் அதிகளவு உற்பத்தி, இருப்பு வைத்த மஞ்சள் விற்பனைக்கு குவிந்ததால், மஞ்சள் விலை குறைந்தது. குவிண்டால், 3,500 ரூபாய் என்ற அளவில் விற்றதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேட்டூர் அணை, பவானிசாகர் அணை உள்பட நீராதார பகுதிகளில் போதிய நீர் இருப்பும் இல்லை. மழையும் பெய்யாததால், மஞ்சள் சாகுபடி பரப்பு மிகவும் குறைந்துள்ளது. வெளிமாநிலங்களில் மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகரித்ததும், விற்பனைக்காக அந்த மஞ்சள் ஈரோடு வந்ததும் விலை குறைவுக்கு காரணமாகும். தற்போது வெளிமாநிலங்களிலும் மஞ்சள் சாகுபடி குறைந்ததால், அடுத்தாண்டு மஞ்சள் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளான ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடியில் அதிகம் மஞ்சள் சாகுபடியாகிறது. ஜூன், ஜூலையில் தான் பயிரிடப்படும். ஜூன் வரை, 500 ஹெக்டேர் அளவுக்கு தான் பயிரிடப்பட்டுள்ளது. இந்தாண்டு, 6,000 முதல், 7,000 ஹெக்டேர் வரை பயிரிட்டாலே அதிகம்.
விவசாயிகள் தொடர்ந்து மஞ்சளையே சாகுபடி செய்யாமல் மாற்றி மாற்றி பயிரிட வேண்டும். தேவையான காம்ப்ளக்ஸ், யூரியா, சூப்பர் பொட்டாஷ் போன்ற உரங்கள் இருப்பு உள்ளன.

கடந்தாண்டு புதிதாக மஞ்சள் சாகுபடி செய்ய விரும்புவோருக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகரிப்பு திட்டத்தில் ஹெக்டேருக்கு, 11 ஆயிரத்து, 250 ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. இந்தாண்டு இச்சலுகை இல்லை. சொட்டுநீர் பாசனத்துக்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது. அதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)