பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
05:18
தர்மபுரி:தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், வாழை சாகுபடி சிறப்பாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், நெய் பூவன், கற்பூரவள்ளி, செவ்வாழை, க்ராண்டு நையன், பச்சை வாழை, ரஸ்தாளி, ஏலக்கி, மோரீஸ் உள்ளிட்ட வாழை ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். மேட்டுப்பாங்கன மலை பரப்பு நிலங்களில் ஏலக்கி சாகுபடி செய்யப்படுகிறது.மாவட்டத்தில் பருவமழை பொய்த்து வரும் நிலையில், இறவை பாசன பகுதியிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால், வாழை உற்பத்தி, 40 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், இதன் விலை உயர்ந்துள்ளது.சில்லறை விலையில் கற்பூரவல்லி, பூவன் பழம் ஒன்று, 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது, தற்போது, 2.50 முதல், 3 ரூபாய் வரை விற்பனையாகிறது. 3 ரூபாய்க்கு விற்பனையான பச்சை பழம், 4-5 ரூபாய்க்கும்,5 ரூபாய்க்கு விற்பனையான செவ்வாழை, 7 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.வாழைப்பழம் விலை உயர்வால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சந்தைக்கு தொடர்ந்து தட்டுபாடாக வாழை வரத்து இருப்பதால், விலை குறைய வாய்ப்பு இல்லை என, வியாபாரிகள் கூறினர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|