பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
05:19
ழமும்பை:பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), வெளிநாடுகளில், டாலர் அடிப்படையிலான, கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 125 கோடி டாலரை (7,000 கோடி ரூபாய்) திரட்டி உள்ளதாக, இவ் வங்கியின் தலைவர் பிரதீப் சவுத்ரி தெரிவித்தார்.இக் கடன் பத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டிற்கு, 3.75 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
வங்கி வெளியிட்ட கடன் பத்திரங்களில், 350 அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளதாகவும், இக்கடன் பத்திரங்களை, கூடிய விரைவில் சிங்கப்பூர் பங்குச் சந்தைகளில் பட்டியலிட இருப்பதாகவும் சவுத்ரி தெரிவித்தார்.
சர்வதே தரக்குறியீட்டு நிறுவனமான, ஸ்டாண்டர்டு அண்டு பூர்ஸ் (எஸ் அண்டு பி), எஸ்.பீ.ஐ.,யின் இக்கடன் பத்திரங்களுக்கு, "பீ.பீ.பீ.' என்ற தரக்குறியீட்டை வழங்கியுள்ளது. மேலும், இக்கடன் பத்திரங்கள் வேண்டி, 5.2 மடங்கிற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.13.35 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பை கொண்டுள்ள, எஸ்.பீ.ஐ.,க்கு, உள்நாட்டில், 14,097 கிளைகளும், 34 நாடுகளில், 173 அலுவலகங்களும் உள்ளன. இவை அனைத்திலுமாக, 20.20 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|