பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
05:20
புதுடில்லி:அடுத்த நான்கு மாதங்களில் (ஆக.,-நவ.,), நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, 20 சதவீத அளவிற்கு இருக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மத்திய வர்த்தக அமைச்சகம், இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.இலக்கு:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 36 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிற்கு (19.80 லட்சம் கோடி ரூபாய்), ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட, 1.7 சதவீதம் குறைந்து, 7,520 கோடி டாலராக (4.13 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால், ஏற்றுமதி இலக்கை எட்ட முடியாது. எனவே, ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், ஏற்றுமதி கூட்டமைப்பு நடவடிக்கை, மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசும், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், ஏற்றுமதியாளர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் அளிக்க, தயாராக உள்ளது என, மத்திய வர்த்தக
செயலர் எஸ்.ஆர்.ராவ், கோல்கட்டாவில், ஏற்றுமதியாளர்கள் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்தார்.ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து மந்த நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் ஏற்றபட்டுள்ள மந்த நிலை, நாட்டின் ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை நன்கு உணர முடிகிறது.எனவே, ஏற்றுமதியாளர்கள், மதிப்பு கூட்டப் பட்ட பொருட்களின் வாயிலான ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஏற்கனவே உள்ள சந்தைகள் தவிர, புதிய சந்தைகளுக்கும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
சலுகைகள்மத்திய அரசு, ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு, தீர்வு காணும் வகையில், பல்வேறு திட்டங்களை அமல்படுத்த தயாராகி உள்ளது. மேலும், ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட உள்ளன என, ராவ் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|