ஏற்றுமதியில் 20 சதவீதம் வளர்ச்சி காணவேண்டும்:மத்திய வர்த்தக அமைச்சகம்ஏற்றுமதியில் 20 சதவீதம் வளர்ச்சி காணவேண்டும்:மத்திய வர்த்தக அமைச்சகம் ... நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில்...மத்திய அரசின் பொது கடன் ரூ.37.53 லட்சம் கோடி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில்...மத்திய அரசின் பொது கடன் ரூ.37.53 லட்சம் ... ...
கறிக்கோழி தீவனம் விலை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
05:21

பல்லடம்:கறிக்கோழி தீவனம் விலை, ஒரே மாதத்தில் கிலோவுக்கு, 10 ரூபாய் உயர்ந்துள்ளதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பல்லடம், உடுமலை, பொங்கலூர் பகுதியில், 10 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. வாரத்துக்கு 50 லட்Œம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்து, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
மக்காச்சோளம்:கறிக்கோழிகளுக்கு மக்காச்சோளம், சில்வர்மத்தி, சோயா புண்ணாக்கு , தவிடு கொண்டு தயாரிக்கப்படும் தீவனம், உணவாக வழங்கப்படுகிறது.கடந்த மாதம், ஒரு கிலோ கறிக்கோழி தீவனம் விலை, 20 ரூபாயாக இருந்தது. தற்போது, கிலோ, 30 ரூபாயாக உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களான மக்காச்சோளம் குவிண்டால், 1,200 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது.சில்வர் மத்தி கருவாடு குவிண்டால், 2,000 ரூபாயில் இருந்து 4,000 ஆயிரம் ரூபாயாகவும், ஒரு டன் சோயா புண்ணாக்கு, 20 ஆயிரத்தில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
ஒரு கறிக்கோழி குஞ்சு, இரண்டு கிலோ எடையுள்ள கறிக்கோழியாக வளர்வதற்கு, மூன்றரை கிலோ தீவனம் தேவை. ஒரு மாதத்துக்கு முன், 70 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கறிக்கோழியின் விலை, தற்போது 55 ரூபாயாக குறைந்துள்ளது.தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்திச் செலவு, 60 ரூபாயாக உள்ள நிலையில், இதன் விலை 55 ரூபாயாக உள்ளதால், உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது.
இழப்பு:"கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவின் ' செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது:இந்தியாவில் இருந்து சோயாபுண்ணாக்கு சீனா, பாகிஸ்தான், ஈராக், ஈரான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தீவனம் தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால், ஒரே மாதத்தில், கோழித் தீவனத்தின் விலை கிலோவுக்கு, 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்திக்கு எட்டு ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையை போக்க, சோயாபுண்ணாக்கு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)