பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
05:21
பல்லடம்:கறிக்கோழி தீவனம் விலை, ஒரே மாதத்தில் கிலோவுக்கு, 10 ரூபாய் உயர்ந்துள்ளதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பல்லடம், உடுமலை, பொங்கலூர் பகுதியில், 10 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. வாரத்துக்கு 50 லட்Œம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்து, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
மக்காச்சோளம்:கறிக்கோழிகளுக்கு மக்காச்சோளம், சில்வர்மத்தி, சோயா புண்ணாக்கு , தவிடு கொண்டு தயாரிக்கப்படும் தீவனம், உணவாக வழங்கப்படுகிறது.கடந்த மாதம், ஒரு கிலோ கறிக்கோழி தீவனம் விலை, 20 ரூபாயாக இருந்தது. தற்போது, கிலோ, 30 ரூபாயாக உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களான மக்காச்சோளம் குவிண்டால், 1,200 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது.சில்வர் மத்தி கருவாடு குவிண்டால், 2,000 ரூபாயில் இருந்து 4,000 ஆயிரம் ரூபாயாகவும், ஒரு டன் சோயா புண்ணாக்கு, 20 ஆயிரத்தில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
ஒரு கறிக்கோழி குஞ்சு, இரண்டு கிலோ எடையுள்ள கறிக்கோழியாக வளர்வதற்கு, மூன்றரை கிலோ தீவனம் தேவை. ஒரு மாதத்துக்கு முன், 70 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கறிக்கோழியின் விலை, தற்போது 55 ரூபாயாக குறைந்துள்ளது.தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்திச் செலவு, 60 ரூபாயாக உள்ள நிலையில், இதன் விலை 55 ரூபாயாக உள்ளதால், உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது.
இழப்பு:"கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவின் ' செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது:இந்தியாவில் இருந்து சோயாபுண்ணாக்கு சீனா, பாகிஸ்தான், ஈராக், ஈரான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தீவனம் தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால், ஒரே மாதத்தில், கோழித் தீவனத்தின் விலை கிலோவுக்கு, 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்திக்கு எட்டு ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையை போக்க, சோயாபுண்ணாக்கு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|