கறிக்கோழி தீவனம் விலை அதிகரிப்புகறிக்கோழி தீவனம் விலை அதிகரிப்பு ... நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில்...மத்திய அரசின் பொது கடன் ரூ.37.53 லட்சம் கோடி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில்...மத்திய அரசின் பொது கடன் ரூ.37.53 லட்சம் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பனங்கருப்பட்டி கிலோ ரூ.90 க்கு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
05:23

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பனங்கருப்பட்டி உற்பத்தி காலம் முடிந்ததால், தேக்கமடைந்த பனங்கருப்பட்டியை ஒரு கிலோ, 90 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்பனை செய்துவருகின்றனர்.பதனீர்:மாநிலம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான தென்னை, பனை விவசாயிகள், பனை மரத்தில் பாளையை சீவி, அதில் வடியும் பதநீரில், சுண்ணாம்பு கலந்து, பதனீராக விற்பனை செய்கின்றனர். உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதாலும், ஊட்டச்சத்து அதிகம் இருப்பதாலும், பதனீரை மக்கள் அதிகம் விரும்புவர். உடலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், பதனீரை பாட்டிலில் அடைத்து, காதி வாரியம் விற்பனை செய்கிறது.
பனை, தென்னை :பதனீரின் மூலம் கருப்பட்டி தயாரிக்கப்பட்டு, வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கோபி, டி.என்.பாளையம் வட்டாரம், திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் வட்டாரத்தில் பனை, தென்னை கருப்பட்டி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.உற்பத்தி:ஏப்ரல் மாதத்தில் துவங்கி, ஜூலை மாதம் வரை பனங்கருப்பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. அம்மாதங்களில், குன்னத்தூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு, பனங்கருப்பட்டி அனுப்பப்படுகிறது. தற்போது, பனங்கருப்பட்டி பருவம் நிறைவடைந்ததால், பனங்கருப்பட்டி விற்பனை செய்யப்படுவதில்லை.
எனினும், குன்னத்தூர் பகுதியில் விவசாயிகள் வீடுகளில், இருப்பு வைத்திருந்த பனங்கருப்பட்டியை கிலோ, 90 ரூபாய்க்கு விற்கின்றனர். இன்னும் சில விவசாயிகள், ஈரோடு - திருப்பூர் சாலையோரம், கடை அமைத்து விற்பனை செய்கின்றனர். பனங்கருப்பட்டியில் மருத்துவ குணம் அதிகமாக இருப்பதால், அதிகளவில் மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
பனங்கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:இப்பகுதியில் உற்பத்தியாகும் கருப்பட்டி, குன்னத்தூர் கருப்பட்டி உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் மூலம் விற்பனையாகிறது.மருத்துவ குணம்:ஜனவரி முதல் ஜூலை வரை, பனங்கருப்பட்டியும், ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, தென்னங் கருப்பட்டியும் உற்பத்தி செய்யப்படுகிறது.தற்போது, பனங்கருப்பட்டி உற்பத்தி நிறைவடைந்து விட்டது. தென்னையை விட, பனங்கருப்பட்டியில் அதிக மருத்துவ குணம் இருப்பதால், அதற்கு என்றுமே மக்கள் மத்தியில் மவுசு உண்டு. இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)