பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
23:43
புதுடில்லி: நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி இந்தியா, ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 424 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 549 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. ஆக., இந்நிறுவனத்தின் நிகர லாபம், 23 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.அதேசமயம், இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 27.53 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,256.58 கோடி ரூபாயிலிருந்து, 10,529.24 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, 5.10 சதவீதம் உயர்ந்து, 2,81,526 என்ற எண்ணிக்கையிலிருந்து, 2,95,896 ஆக அதிகரித்துள்ளது.அன்னியச் செலாவணியில் ஏற்பட்ட மாறுபாட்டால், குறிப்பாக யென்-ரூபாய் செலாவணிகளுக்கு இடையேயான மாறுதல்களால், இந்நிறுவனத்தின் லாபம் சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|