பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
23:43
மும்பை: நடப்பு 2012ம் ஆண்டில், உருக்கு பொருட்கள் விலை, 7.2 சதவீதம் அதிகரிக்கும். இந்த விலை உயர்வு, வரும் அக்டோபர் முதல் இருக்கும் என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.தற்போது, பருவ மழை துவங்கியுள்ளதால், உருக்கு பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதுடன் இதன், விலையும் குறைந்துள்ளது. பருவ மழை முடிவடையும் நேரத்தில், அடிப்படை கட்டமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் வேகமெடுக்கும். இந்த காலகட்டத்தில், இத்துறைகளுக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் உருக்கு பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் என தெரிகிறது.சர்வதேச அளவில், உருக்கு தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால், உலகளவில் உருக்கு பொருட்களின் விலை சரிவடைந்துள்ளது. இதையடுத்து, சென்ற ஜூன் மாதம், உள்நாட்டு உருக்கு தயாரிப்பு நிறுவனங்கள், இவற்றின் விலையை 0.5-1 சதவீதம் வரை குறைந்தன.இந்நிலையில், வரும் அக்டோபர் முதல் கட்டுமான நடவடிக்கைகள் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, உருக்கு பொருட்களின் விலை, 7.2 சதவீதம் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே ஆண்டில், விற்பனைக்கான உருக்கு உற்பத்தி, 8.5 சதவீதம் வளர்ச்சிகாணும் என, இந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|