உள்நாட்டில் உருக்கு விலை  7.2  சதவீதம் அதிகரிக்கும் உள்நாட்டில் உருக்கு விலை 7.2 சதவீதம் அதிகரிக்கும் ... நாட்டின்     மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.275 லட்சம் கோடியாக உயரும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.275 லட்சம் கோடியாக உயரும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.8,400 கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
23:44

மும்பை: நடப்பு ஜூலை, 27ம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் மேற்கொண்ட நிகர முதலீடு, 8,400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேசமயம், பங்கு சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், இந்நிறுவனங்களின் முதலீடு குறைந்திருந்தது.பங்கு விற்பனைநடப்பு ஜூலை மாதத்தில், 27ம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், 44,192 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. அதேசமயம், 35,768 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளை விற்பனை செய்துள்ளன. ஆக, இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 8,424 கோடி ரூபாயாக உள்ளது. இந்நிறுவனங்கள், கடன் பத்திரங்களில், ஜூலை மாதத்தில், 3,187 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன என, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் மேற்கு பருவ மழை குறைந்துள்ளதால், நாட்டின் மேற்கு மாநிலங்களில் வேளாண் சாகுபடி மிகவும் மந்தமடைந்துள்ளது. மேலும், நாட்டின் பொருளாதாரத்திலும் மந்த நிலை நிலவுகிறது. இந்நிலையிலும், பிரதமர் மன்மோகன் சிங், நிதி துறையையும் கவனித்து வருகிறார். இவர், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றன, என, இத்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.குறிப்பாக, மழைக்கால பார்லிமென்ட் கூட்டத்தொடர், ஆகஸ்ட் 8ம் தேதி துவங்கப்பட உள்ளது. இதற்கு முன்பாக, பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, சந்தையில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.பதிவு öŒ#த நிறுவனங்கள்நடப்பு ஜூலை மாதத்தில், 27ம் தேதி வரையிலுமாக, மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், 591 புள்ளிகள் அல்லது 3.3 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பு 2012ம் ஆண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், ஒட்டுமொத்த அளவில் பங்கு சந்தைகளில், 50,417 கோடியையும், கடன் பத்திரங்களில், 24,048 கோடி ரூபாயையும் முதலீடு செய்துள்ளன."செபி' அமைப்பிடம், ஜூலை 27ம் தேதி நிலவரப்படி, 1,756 அன்னிய நிதி நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டுள்ளன. இதே காலத்தில், பதிவு செய்து கொள்ளப்பட்ட துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,341 ஆக உள்ளது என,"செபி' தெரிவித்துள்ளது.





Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)