பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
23:45
புதுடில்லி": வரும் 2020ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ.பி.,), 5 லட்சம் கோடி டாலராக (275 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, தனியார் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.சென்ற 2010ம் ஆண்டில், இந்தியாவின் ஜி.டீ.பி.யில், முதலீடுகளின் பங்களிப்பு, 36.6 சதவீதமாக இருந்தது. இது, 2019-20ம் நிதியாண்டில், 40.7 சதவீதம் என்றளவில் உயரும், என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2011 முதல், வரும் 2020ம் ஆண்டு வரையிலான, 10 ஆண்டுகளில், நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீட்டு நடவடிக்கைகளில், அடிப்படை கட்டமைப்பு துறையின் பங்களிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். கடந்த நிதியாண்டில், அடிப்படை கட்டமைப்பு துறையில் ஈர்க்கப்பட்ட மொத்த முதலீட்டில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு, 39.4 சதவீதம் என்றளவில் இருந்தது. இது, 2019-20ம் நிதியாண்டில், 48 சதவீதமாக உயரும்.இதையடுத்@த, வரும் 2020ம் ஆண்டில், இந்தியாவின் ஜி.டீ.பி., 275 லட்சம் கோடி ரூபாயை தாண்டும், என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு ஜப்பானில் இருந்த, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமான அளவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|