நாட்டின்     மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.275 லட்சம் கோடியாக உயரும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.275 லட்சம் கோடியாக உயரும் ... இந்தியன் ஆயில் நிறுவனம்: ரூ.20,000 கோடியில் இலங்கையில் சுத்திகரிப்பு ஆலை இந்தியன் ஆயில் நிறுவனம்: ரூ.20,000 கோடியில் இலங்கையில் சுத்திகரிப்பு ஆலை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கி "ரெப்போ' வட்டி விகிதங்களை குறைக்குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
23:47


மும்பை: ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கை இன்று அறிவிக்கப்படவுள்ளது. இதில்,"ரெப்போ ரேட்' எனப்படும் வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள் குறைக்க வாய்ப்பில்லை என, பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில், உணவு மற்றும் எரிபொருட்களுக்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பணவீக்கம், சென்ற ஜூன் மாதத்தில், 7.25 சதவீதமாக குறைந்துள்ளது என்றாலும், நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் 10.02 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்துள்ளது. எனவே, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைப்பதற்கான சாத்தியமில்லை என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ், அண்மையில் தெரிவித்திருந்தார்.ஆனால், மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என, மறைமுகமாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், பருவமழை குறைந்துள்ளதால்,நாட்டின் பல மாநிலங்களில் வேளாண் சாகுபடி தாமதம் அடைந்துள்ளது. மழை பொழிவு மேலும் குறையும் நிலையில், வேளாண் உற்பத்தி குறைந்து, விளைப்பொருட்களின் விலை அதிகரிக்கும். இதனால், பணவீக்கமும் கூடும்.இந்த இக்கட்டான சூழ்நிலையை, ரிசர்வ் வங்கி எப்படி எதிர் கொள்ளப் போகிறது? அல்லது நிர்பந்தத்தால் வட்டி விகிதங்களை குறைக்குமா என்பது, இன்றைய ரிசர்வ் வங்கியின் ஆய்வுக் கூட்டத்தில் தெரிந்துவிடும்.


Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)