பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
23:47
மும்பை: ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கை இன்று அறிவிக்கப்படவுள்ளது. இதில்,"ரெப்போ ரேட்' எனப்படும் வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள் குறைக்க வாய்ப்பில்லை என, பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில், உணவு மற்றும் எரிபொருட்களுக்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பணவீக்கம், சென்ற ஜூன் மாதத்தில், 7.25 சதவீதமாக குறைந்துள்ளது என்றாலும், நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் 10.02 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்துள்ளது. எனவே, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைப்பதற்கான சாத்தியமில்லை என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ், அண்மையில் தெரிவித்திருந்தார்.ஆனால், மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என, மறைமுகமாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், பருவமழை குறைந்துள்ளதால்,நாட்டின் பல மாநிலங்களில் வேளாண் சாகுபடி தாமதம் அடைந்துள்ளது. மழை பொழிவு மேலும் குறையும் நிலையில், வேளாண் உற்பத்தி குறைந்து, விளைப்பொருட்களின் விலை அதிகரிக்கும். இதனால், பணவீக்கமும் கூடும்.இந்த இக்கட்டான சூழ்நிலையை, ரிசர்வ் வங்கி எப்படி எதிர் கொள்ளப் போகிறது? அல்லது நிர்பந்தத்தால் வட்டி விகிதங்களை குறைக்குமா என்பது, இன்றைய ரிசர்வ் வங்கியின் ஆய்வுக் கூட்டத்தில் தெரிந்துவிடும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|