நாட்டின்     மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.275 லட்சம் கோடியாக உயரும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.275 லட்சம் கோடியாக உயரும் ... மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா பங்களிப்பால்... நாட்டின் சோயா சாகுபடி 138 லட்சம் ஹெக்டேராக உயர்வு மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா பங்களிப்பால்... நாட்டின் சோயா சாகுபடி 138 ... ...
இந்தியன் ஆயில் நிறுவனம்: ரூ.20,000 கோடியில் இலங்கையில் சுத்திகரிப்பு ஆலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
23:48

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி),இலங்கையில், 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைக்க உள்ளது. இந்நிறுவனம், வெளிநாடுகளில் அமைக்கும் முதல் தொழிற்சாலை, இது, என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டாவது நிறுவனம்இந்தியாவின் எஸ்ஸார் எனர்ஜி நிறுவனம், முதன்முதலாக பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை, இங்கிலாந்தில் அமைத்தது. இதையடுத்து, இரண்டாவதாக ஐ.ஓ.சி. நிறுவனம் வெளிநாடுகளில், இரண்டாவதாக சுத்திகரிப்பு தொழிற்சாலையை தொடங்க உள்ளது.நம்நாட்டில், ஐ.ஓ.சி. நிறுவனம், 10 சுத்திகரிப்பு ஆலைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், இலங்கையில் புதிதாக அமைக்க உள்ள ஆலை, ஆண்டுக்கு, 50 முதல் 90 லட்சம் டன் சுத்திகரிப்பு திறன் கொண்டதாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது."இலங்கையில் சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்கும் வகையில், முதல் கட்ட ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வரி சலுகைகள், உற்பத்தி மற்றும் சுங்க வரி விலக்கு குறித்து மேலும், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கை அரசுசுத்திகரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தை, இலங்கை அரசு வழங்க உள்ளது' என, பெயர் வெளியிட விரும்பாத ஐ.ஓ.சி. நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஐ.ஓ.சி. நிறுவனம், அதன் "லங்கா ஐ.ஓ.சி.' என்ற துணைநிறுவனத்தின் வாயிலாக, ஏற்கனவே இலங்கையில் செயல்பாடுகளை கொண்டுள்ளது. குறிப்பாக, தனியார் எண்ணெய் நிறுவனங்களில், லங்கா ஐ.ஓ.சி மட்டும் தான், பெட்ரோலிய பொருட்களின் சில்லரை விற்பனை மையங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுத்திகரிப்பு திறன்இது, தவிர, அந்நாட்டின் பொதுத் துறை நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனும், பெட்ரோலிய விற்பனை மையங்களை செயல்படுத்தி வருகிறது.இலங்கையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன், ஆண்டுக்கு, 20 லட்சம் டன் என்றளவில் உள்ளது. அதேசமயம்,அந்நாட்டின் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு, ஆண்டுக்கு, 45 லட்சம் டன்னாக உள்ளது. மீதமுள்ள, 25 லட்சம் டன்னை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்கிறது. மேலும், இலங்கையில், வரும் 2020ம் ஆண்டில், பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை, 65 லட்சம் டன்னாகவும், 2030ம் ஆண்டில் 85 லட்சம் டன்னாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோலிய பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்வதற்கு பதிலாக, கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பு செய்து பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது. இதனை சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி, ஐ.ஓ.சி. நிறுவனம் சுத்திகரிப்பு ஆலை அமைப்பு பணியில் அந்நாட்டில் களமிறங்க உள்ளது.பங்களிப்புஇந்தியாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பு திறனில், ஐ.ஓ.சி. நிறுவனம், 34.8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் ஆண்டுக்கு, 6.57 கோடி டன்னாக உள்ளது.இலங்கையில், லங்கா ஐ.ஓ.சி., நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 43.5 சதவீதம் என்றளவில் உள்ளது. இந்நிறுவனம், இலங்கை ராணுவத்திற்கு மசகு எண்ணெய் சப்ளை செய்யும் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது.இலங்கை அரசுடன் இணைந்து, கூட்டுத் திட்டத்தின் வாயிலாக, இப்புதிய சுத்திகரிப்பு ஆலையை அமைக்க, ஐ.ஓ.சி. நிறுவனம் திட்டமிட்டுள்ளது.








Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)