இந்தியன் ஆயில் நிறுவனம்: ரூ.20,000 கோடியில் இலங்கையில் சுத்திகரிப்பு ஆலை இந்தியன் ஆயில் நிறுவனம்: ரூ.20,000 கோடியில் இலங்கையில் சுத்திகரிப்பு ஆலை ... மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா பங்களிப்பால்... நாட்டின் சோயா சாகுபடி 138 லட்சம் ஹெக்டேராக உயர்வு மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா பங்களிப்பால்... நாட்டின் சோயா சாகுபடி 138 ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்: வர்த்தகம் ரூ.3.33 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
23:49

சென்னை,: பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்கின் மொத்த வர்த்தகம், ஜூன் மாதம் வரையிலுமான காலத்தில், 3,33,248 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட (2,70,320 கோடி ரூபாய்) 23.28 சதவீதம் அதிகமாகும் என, இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.நரேந்திரா தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:நடப்பு நிதியாண்டின், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், வங்கி, 233.44 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 205.58 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, வங்கியின் நிகர லாபம் 13.55 சதவீதம் அதிகரித்துள்ளது.இதே காலாண்டுகளில், வங்கியின் மொத்த வருவாய், 24.73 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,331.77 கோடியிலிருந்து, 5,402.85 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், வங்கியின் நிகர வட்டி வருவாய், 11.84 சதவீதம் உயர்ந்து, 1,187.63 கோடியிலிருந்து, 1,328.28 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் வரையிலுமாக, வங்கி திரட்டிய டெபாசிட் 1,84,882 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 1,51,173 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, திரட்டப்பட்ட டெபாசிட் 22.30 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதே காலத்தில், வங்கி வழங்கிய கடன்கள், 24.52 சதவீதம் அதிகரித்து, 1,19,148 கோடியிலிருந்து, 1,48,366 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு நரேந்திரா கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)