இந்தியன் ஆயில் நிறுவனம்: ரூ.20,000 கோடியில் இலங்கையில் சுத்திகரிப்பு ஆலை இந்தியன் ஆயில் நிறுவனம்: ரூ.20,000 கோடியில் இலங்கையில் சுத்திகரிப்பு ஆலை ... பிளாஸ்டிக்' விலை உயர்வு பிளாஸ்டிக்' விலை உயர்வு ...
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா பங்களிப்பால்... நாட்டின் சோயா சாகுபடி 138 லட்சம் ஹெக்டேராக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
23:50

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பு கரீப் பருவத்தில், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில், போதிய அளவிற்கு பருவ மழை பெய்துள்ளதை அடுத்து, சோயா பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலக்கடலைஅமைச்சகத்தின் இந்த விவரத்தின் படி, நாடு தழுவிய அளவில், கடந்த வார இறுதி நிலவரப்படி, 138.33 லட்சம் ஹெக்டேரில் சோயா விதைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 3 சதவீதம் அதிகமாகும். இதையடுத்து, ஒட்டுமொத்த அளவில் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும், குஜராத் மாநிலத்தில், மழை குறைவால் நிலக்கடலை சாகுபடியில் விறுவிறுப்பு ஏற்படவில்லை. இதை ஈடுசெய்யும் வகையில், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில், சென்ற வார இறுதி நிலவரப்படி, 14-15 லட்சம் ஹெக்டேரில், சோயா விதைப்பு பணி நடைபெற்றுள்ளது. பொதுவாக கரீப் பருவத்தில், வட மாநிலங்களில் சோயா மற்றும் நிலக்கடலை ஆகிய, எண்ணெய் வித்துக்களே அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.பருப்பு வகைகள்போதியளவிற்கு, தென் மேற்கு பருவ மழை இல்லாததால், பருப்பு வகைகள் உள்ளிட்ட இதர தானியங்களின், சாகுபடி பரப்பளவு, கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது. இருப்பினும், கடந்த வாரத்தில் ஒரு சில, தென்மேற்கு மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில், மழை அதிகரித்துள்ளது. இதனால், மேற்கண்ட தானியங்களின் விதைப்பு பணி, தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து வேளாண் பொருளாதார நிபுணர் ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதம் வரையில், 20-22 சதவீத அளவிற்கு, மழைப்பொழிவு குறைந்துள்ளது. மற்ற தானியங்களை விட, பருப்பு வகைகள் உற்பத்தி குறைந்தால் தான், அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.நெல் சாகுபடிமற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது,மேற்கு வங்கத்தில், மழைப்பொழிவு நன்கு உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில், இதுவரையிலுமாக, ஏழு லட்சம் ஹெக்டேரில் நெல் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நாடு தழுவிய அளவில், நடப்பு கரீப் பருவத்தில் 191 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், நாடு தழுவிய அளவில், 97.24 லட்சம் ஹெக்டேரில், பருத்தி விதைப்பு பணியும், 7,000 ஹெக்டேரில் சணல் சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை, எப்போதும் மேற்கொள்ளப்படும் அளவை விட அதிகமாகும்.கரும்புமதிப்பீட்டு காலத்தில், நாடு தழுவிய அளவில், கரும்பு பயிரிடும் பரப்பளவு 52.85 ஹெக்டேராகவும், பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவு 62.99 லட்சம் ஹெக்டேராகவும் உள்ளன. மேலும், இதர தானியங்கள், 138.33 லட்சம் ஹெக்டேரில், பயிரிடப்பட்டிருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது."வரும் நாட்களில், பருவமழை பொழிவில் முன்னேற்றம் இன்றி, இதே நிலை தொடரும்பட்சத்தில், நடப்பு 2012ம் ஆண்டில் மிகப் பெரிய வறட்சி ஏற்படும்' என தரக் குறியீட்டு நிறுவனமான கிரிசில் எச்சரிக்கை செய்துள்ளது. இதற்கு முன், கடந்த 2009ம் ஆண்டு, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மிக அதிகமான வறட்சியை நாடு சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை அளவு
கடந்த வேளாண் பருவத்தில் (2011-12), நாட்டின் உணவு தானிய உற்பத்தி, சாதனை அளவாக, 25.74 கோடி டன்னை எட்டியுள்ளது என, மத்திய அரசின் நான்காவது மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், நெல் உற்பத்தி, 10.43 கோடி டன்னாகவும், கோதுமை உற்பத்தி 9.39 கோடி டன்னாகவும், பருப்பு வகைகள் உற்பத்தி, 1.72 கோடி டன்னாகவும் உள்ளது. இவை தவிர, இதர தானியங்கள் உற்பத்தி 4.20 கோடி டன்னாகவும், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 3 கோடி டன்னாகவும், பருத்தி உற்பத்தி 3.52 கோடி டன்னாகவும் மற்றும் கரும்பு உற்பத்தி 35.77 கோடி டன்னாகவும் அதிகரித்துள்ளது என மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)