மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா பங்களிப்பால்... நாட்டின் சோயா சாகுபடி 138 லட்சம் ஹெக்டேராக உயர்வு மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா பங்களிப்பால்... நாட்டின் சோயா சாகுபடி 138 ... ... பிளாஸ்டிக்' விலை உயர்வு பிளாஸ்டிக்' விலை உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உலக நிலவரங்களால்... "சென்செக்ஸ்' 304 புள்ளிகள் உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
23:50

மும்பை :நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள் கிழமையன்று, உலக நிலவரங்களால் மிகவும் சிறப்பாக இருந்தது.ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள், கடன் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம், இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்தது.இந்நிலையில், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், 1.5 சதவீதம் என்றளவில் குறைவாக வளர்ச்சிகண்டுள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட குறைவாகும். இதை கருத்தில் கொண்டு, அமெரிக்க அரசு, நிதிக் கொள்கையில், பல்வேறு சலுகை திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும், உலகளவில் பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது.நேற்றைய பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், மின்சாரம், பொறியியல், வங்கி, உலோகம், நுகர் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 304.49 புள்ளிகள் அதிகரித்து, 17,143.68 புள்ளி களில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,163.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,919.14 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மூன்று நிறுவன பங்குகளை தவிர ஏனைய அனைத்து நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 99.95 புள்ளிகள் உயர்ந்து, 5,199.80 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,506.60 புள்ளிகள் வøயிலும், குறைந்தபட்சமாக, 5,129.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.






Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)