பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
23:50
மும்பை :நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள் கிழமையன்று, உலக நிலவரங்களால் மிகவும் சிறப்பாக இருந்தது.ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள், கடன் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம், இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்தது.இந்நிலையில், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், 1.5 சதவீதம் என்றளவில் குறைவாக வளர்ச்சிகண்டுள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட குறைவாகும். இதை கருத்தில் கொண்டு, அமெரிக்க அரசு, நிதிக் கொள்கையில், பல்வேறு சலுகை திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும், உலகளவில் பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது.நேற்றைய பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், மின்சாரம், பொறியியல், வங்கி, உலோகம், நுகர் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 304.49 புள்ளிகள் அதிகரித்து, 17,143.68 புள்ளி களில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,163.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,919.14 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மூன்று நிறுவன பங்குகளை தவிர ஏனைய அனைத்து நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 99.95 புள்ளிகள் உயர்ந்து, 5,199.80 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,506.60 புள்ளிகள் வøயிலும், குறைந்தபட்சமாக, 5,129.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|